என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bihar govt"

    • பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. அக்டோபர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து பீகார் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அதுபோல காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலில் களம் இறங்க உள்ளது.

    பீகாரில் ஆட்சியை கைப்பற்ற இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ள நிலையில் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.

    இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார் மாநில பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சந்தை வழிகாட்டும் உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

    இந்த தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்தக்கட்டமாக தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து சமுதாய பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த நிதி உதவி செய்யப்படும். இந்த நிதி உதவியை பெறும் பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுடன் இணைந்து செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்று பரம்வீர் சக்ரா.
    • போர்க்காலத்தில் சிறந்த வீரத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

    பாட்னா:

    ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது பரம்வீர் சக்ரா ஆகும். போர்க்காலங்களில் மிகவும் துணிச்சலுடன் செயல்படும் முப்படையினரின் வீரத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

    கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக ராணுவ மேஜர் சோம்நாத் சர்மா பரம்வீர் சக்ரா விருதை பெற்றார். இதுவரை 21 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக இது வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பீகார் அரசு பரம்வீர் சக்ரா விருது உள்பட பல்வேறு விருதுகளுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பரம்வீர் சக்ரா விருது பெறுபவர்களுக்கு ஒருமுறை செலுத்தும் ரூ.10 லட்சமானது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அசோக சக்ரா விருதுக்கான பரிசுத்தொகை 8 லட்சத்தில் இருந்து 75 லட்சமாகவும், மகாவீர் சக்ரா விருதுக்கு 5 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும், கீர்த்தி சக்ரா விருதுக்கு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், வீர் சக்ரா விருதுக்கு 2 லட்சத்தில் இருந்து 9 லட்சமாகவும், சவுர்ய சக்ரா விருது 1.5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    பீகார் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு வலியுறுத்தினால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #CBI #Biharshelterhomekilling
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 42 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அங்குள்ள 42 சிறுமிகளில் 29 பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள ஒரு சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த சம்பவம் பீகார் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. அரசு காப்பகத்தில் சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி மாநில காவல்துறை சிறப்பாக விசாரித்து வருவதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கு அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதே வேளையில், இதை ஏற்க மறுத்த பீகார் மாநில எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை இன்று எழுப்பினர். மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பீகார் மாநில அரசு கேட்டுக்கொண்டால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Biharshelterhome #Biharshelterhomerape #Biharshelterhomekilling
    ×