search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rape murder case"

    பீகார் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு வலியுறுத்தினால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #CBI #Biharshelterhomekilling
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 42 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அங்குள்ள 42 சிறுமிகளில் 29 பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள ஒரு சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த சம்பவம் பீகார் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. அரசு காப்பகத்தில் சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி மாநில காவல்துறை சிறப்பாக விசாரித்து வருவதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கு அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதே வேளையில், இதை ஏற்க மறுத்த பீகார் மாநில எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை இன்று எழுப்பினர். மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பீகார் மாநில அரசு கேட்டுக்கொண்டால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Biharshelterhome #Biharshelterhomerape #Biharshelterhomekilling
    ×