என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன்.
    • திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஏற்கனவே படத்தின் பாடலான காதலே, ஆசம் ஃபீலு மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் தண்ணீர் கேன் வியாபாரம், அதில் உருவாகும் பிரச்சனை யாக கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது. டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் விஷ்ணு வரதன் அவர்களது எகஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
    • இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அவர் ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசினார். மேலும் சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்துவந்த நிலையில் அந்த நிலைப்பாட்டிலிருந்து டிரம்ப் விலகி வருகிறார்.

    இதனால் டிரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி காரி என டிரம்ப் கூறினார்.இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது,

    ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.

    இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை.

    உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் விரும்புகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று தெரிவித்தார்.

    உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் டிரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்றார். இதற்கிடையே இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
    • தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.

    தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை" என்றார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் "எங்கள் கல்வி எங்கள் உரிமை" என பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர், " பெற்றோர்கள் தான் நமது முதல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான் நமது இரண்டாவது பெற்றோர்" என்றார்.

    • அவர்கள் அங்கு இருப்பதை மணல் லாரி ஓட்டுநர் அறிவில்லை
    • கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார்

    மகாராஷ்டிராவில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் அங்கு இருப்பதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா.
    • தற்பொழுது ரியோராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த ஆண்டு இவர் இசையில் வெளியான தி கோட் திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. இசையமைப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது ரியோராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடைசியாக விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியான நேசிப்பாயா படத்தில் இசையமைத்தார்.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் #ராண்டம் யுவன் பாட்டு என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் நெட்டிசன்கள் அவர்களுக்கு பிடித்த யுவன் பாடல்களின் வீடியோவை பதிவிட்டு இந்த ஹாஷ்டாகை உபயோகித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து யுவன் ஷங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது " யார் இந்த டிரெண்டை ஆரம்பித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நீங்கள் காட்டும் அன்பில் நான் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி."

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை.
    • 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்மன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெருப்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,

    1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

    2. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.

    3. சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    4. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    5. பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    6. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுந்தும் முறை அமல்படுத்தப்படும். 7. நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.

    8. நியாய விலைக் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும். 9. அனைந்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

    10. கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    11. முக்கியமான மலைக் கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும்.

    12. முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

    13 . நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.

    14. தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

    15. மாநகராட்சி பகுதிகளில் புகையில்லாப் பேருந்துகள் இயக்கப்படும்.

    16. கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    17. குழந்தைகளுக்கு உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    18. பத்திரிகையாளர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.

    19. சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மோட்டார் வாங்க 10000 ரூபாய் மானியம்

    20. நீட் தேர்வுரத்து.

    21. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3% இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    22. புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    23. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

    24, 70 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 10 விழுக்காடு உயர்த்தப்படும்.

    25. கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி.

    26. புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும்.

    27. கல்வி நிறுவனங்களில் ஒய் பை வசதி செய்து தரப்படும்.

    28. அரகத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    29. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    30. கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    31. நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம் கொண்டு வரப்படும்.

    32. 2000 கோடி ரூபாய் மதிப்பில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

    33. ஏழையெளிய வணிகர்களுக்கு 15000 ரூபாய் வரை வட்டியில்லாக் கடன்.

    34. மீனவ சமுதாயந்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

    35. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

    36. மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.

    37. அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும். 38. வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.

    39. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    40, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு 25 இலட்சமாக உயர்த்தப்படும்.

    41. தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

    42. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    43. பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.

    44. சென்னை சிறுசேரி பகுதியில் நவீனப் பேருந்து நிலையம்.

    45. திருச்சி, மதுரை, சேலம், நெல்லை மற்றும் கோவை பகுதிகளில் பெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    46. வேலூர், கரூர், ஒசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

    47. 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

    48. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    49. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்.

    50. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு

    51. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்.

    52. தமிழ்நாட்டின் கடன் கமை குறைக்கப்படும்.

    53. பொதுத் துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும்.

    54. அனைத்து உணவுப் பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விவை.

    55. கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலைக்கழகம்.

    56. ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்.

    57. தூத்துக்குடி, வேலூர், சுரூர், தர்மபுரி மாவட்டங்களில் பேரிட்சை வளர்க்க

    சிறப்பு நிதியுதவி. 58. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்.

    59. தாமிரபரணி கருமேனி -நம்பியாறு இணைப்புத் திட்டம்.

    60. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40000 ஏக்கர் பயனடைய கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.

    61. தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும்.

    62. சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்பிற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    63. கச்சத்தீவுமீட்டி,

    64 மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக்

    கல்லூரிகள் உருவாக்கப்படும்.

    65. மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நூறு சதவிகித கல்வியறிவு 66. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை

    பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    67. தொழில் துறையை மீட்டெடுக்க 15,000 கோடி ரூபாய் நிதி உதவி.

    68. இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் தொடங்கப்படும்.

    69. திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நோல் பொருள்கள் பூங்கா அமைக்கப்படும்.

    70. அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்.

    71. விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள்.

    72. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று எல்.இ.டி. பல்புகள்.

    73. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள்.

    74. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும்.

    75. தமிழக அரசின் பணி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநிலத் தீர்ப்பாயம் மீண்டும் அமைக்கப்படும்.

    76. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்.

    77. அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

    78. கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம்.

    79. சாலை ஓரங்களில் உறங்கிடும் மக்களுக்கு இரவு நேரக் காப்பிடங்கள்

    அமைக்கப்படும்.

    80. கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு, மூன்று

    ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    81. தாம்பரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள்.

    82. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை

    83. குறைந்தது 100 நாட்கள் சட்டப் பேரவை.

    84. சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுதல்,

    85. போலீஸ் கமிஷன் அமைத்தல்,

    86. சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள்.

    87. கொடைக்கானல் பழனி மலைகளுக்கு இடையே கேபிள்கார் போக்குவரத்து

    88. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தல்.

    89. சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம். 90. கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்தல்.

    போன்ற இன்னும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை. பொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய் நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

    பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சர் அவர்களின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுநிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது
    • இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் நிறுவனம் கோர்க் ஏஐயில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது.

    பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கானவராக உள்ளார்.

    அரசு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவரு, இவரே. அரசின் வீண் செலவுகளை கண்டிருந்தது டிரம்ப்பிடம் கூறுவதே இந்த துறையின் வேலை. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த USAID அமைப்புக்கான நிதியை எலான் மஸ்க் அறிவுரையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    மேலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் 10,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தார். 75,000 அரசு ஊழியர்கள் சலுகைகளை ஏற்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கிடையே ஆவணமின்றி அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவரை கை கால்களில் சங்கிலி கட்டி நாடு கடத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

     

    இந்நிலையில் எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (எக்ஸ். ஏஐ) கோர்க் சாட்பாட் ஒரு தவறு செய்துள்ளது. ஏஐ கோர்ட் சாட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடக்குமடக்கான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.

    நெட்டிசன் ஒருவர் கோர்ட் சாட்பாட் - இடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.

    இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் டைப் செய்துள்ளார். இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் டிரம்ப்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க் என்று கோர்க் பதிலளித்துள்ளது.

    இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் ஏஐ கோர்க் சாட்பாட்டில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

    • தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
    • 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(27) மீது கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தரை(27)குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     32 ஆண்டுகள் சிறை தண்டனையை மாத்தர் எதிர்கொள்கிறார். ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து அவருக்கான தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணையின்போது மாத்தர்  எதுவும் பேச மறுத்துவிட்டார்.

    விசாரணை முழுவதும், நீதிமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர் "சுதந்திர பாலஸ்தீனம்" என்று மட்டுமே கூறினார்.

    இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 2022 ஆகஸ்ட் 12 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது மேடையில் எரிய ஹாடி மாத்தர், சல்மான் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

    சம்பத்தின்பின் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

    இந்த தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தனது வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

     

    ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என்று கூறப்படுகிறது. இந்த நாவலில் சல்மான் ருஷ்டி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் சில பகுதிகளை கற்பனையாக சித்தரித்துள்ளதே எதிர்ப்புக்கு காரணமாகும். 

    • சாம்பியன் டிராபியில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்று.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது.

    சிறிது ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
    • சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து தரப்பட்டது.

    உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்கச் செய்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சிறிய தொட்டிகளில் வழக்கமான தண்ணீருடன் கலக்கப்பட்டு கைதிகள் புனித நீராடி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  கைதிகள் அவற்றில் புனித நீராடினர்.

    இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது:

    சங்கம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனித பூமியில், உத்தரப் பிரதேசம் வரலாற்றைப் படைத்துள்ளது. 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களைப் பெற்றுள்ளனர்.

    அதே பாதையைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், அங்கிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்ட கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

    ×