என் மலர்
தலைப்புச்செய்திகள்
திரையரங்குகள் தாங்கள் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களை அதே உற்சாகத்துடன் பார்க்க இந்த ஓடிடி தளங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணப்பா
பான் இந்தியா படமாகக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது 'கண்ணப்பா' திரைப்படம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இருவரும் இணைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த திரைப்படம், வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
பன் பட்டர் ஜாம்
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
சரண்டர்
பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் சுஜித் சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சரண்டர்'. கவுதமன் கணபதி இயக்கத்தில் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த ஆக.1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
புட்டேஜ்
‛விடுதலை' நாயகி மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புட்டேஜ்'. த்ரில்லர் கதைக்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. சைஜூ ஸ்ரீதரன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சூ ஃப்ரம் சோ
ஜெ.பி தும்மினாட் இயக்கத்தில், உருவான காமெடி திரைப்படம் 'சூ ப்ரம் சோ'. கன்னட திரையரங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம், ரூ.120கோடி வரை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. கன்னடம் தவிர்த்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5 அல்லது 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் ராஜ் பி ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
- லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பு.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அந்த பதிவில், " உலகெங்கிலும் உள்ள மக்களின் தன்மானத்தை சுயமரியாதையையும் காத்தவர் தந்தை பெரியார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது" என்றார்.
- தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்.
- த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டம்.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுப்பயணத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 5 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் வாரம்- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் எனவும், 2வது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, 3வது வாரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, 4வது வாரம்- திருப்பூர், ஈரோடு, நீலகிரி; 5வது வாரம்- திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
சிவகார்த்திகேயன் நடிப்பில் "மதராஸி"
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன்-டிராமா கலந்த படைப்பு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொண்டுள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் "பேட் கேர்ள்" {Bad Girl}
வெற்றிமாறனின் பேனர் கீழ் உருவாகியிருக்கும் Bad Girl படத்தை வர்ஷா பரத் இயக்க அஞ்சலி சிவராமன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலா நடித்த "காந்தி கண்ணாடி"
சின்னத்திரையில் தனக்கு என ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கலக்கு கலக்கிய பாலா தற்பொழுது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலாவின் புதிய முயற்சியாக உருவான இந்த படம், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் "காட்டி"
தனித்துவமான கதையம்சத்துடன் உருவான அனுஷ்காவின் படைப்பு, பெண்கள் மையமாக இருக்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமாகினார்.
"தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்"
பிரபல ஹாலிவுட் ஹாரர் பிராண்டின் புதிய பகுதி, ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை வழங்க வருகிறது.
மொத்தம் 5 திரைப்படங்கள் ரசிகர்களை கவர தயாராக காத்திருக்கின்றன. ஆக்ஷன், டிராமா, ஹாரர் என பல்வேறு வகைகளில் வெளியாகும் இந்த படங்கள், பாக்ஸ் ஆபிஸ் விறுவிறுப்பை அதிகரிக்க இருக்கிறது.
- சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது.
- மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது" என்றார்.
இந்நிலையில், "ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது.
எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான் – ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது, வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது, நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது, ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, எட்டு ஆண்டுகள் முழுவதும் செவிடாய் நடித்து வந்தது. இன்று மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.
மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் முன்னரே தீவிரமாகக் கூறியிருந்தார்: 'ஜிஎஸ்டி மக்களுக்கான நிவாரணம் அல்ல, அது பாஜக அரசின் கொள்ளைக் கருவி' என்று. அந்த வார்த்தைகள் இன்று இடிமுழக்கம் போல் முழங்கி, பாஜக அரசின் பொய்முகமூடியைச் சிதறடிக்கின்றன. மக்களின் உழைப்பை கொள்ளையடித்து, இரத்தமும் வியர்வையும் பிழிந்து, தங்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்ட இந்த அரசு, இப்போது மக்களின் எழுச்சியால் குலுங்குகிறது.
இந்த நாட்டின் நிலம் எரிமலையைப் போலக் குலுங்குகிறது. மக்களின் கோபம் சுடும் காற்றல்ல் அது புயல். அந்த புயலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்களின் சினம் தீப்பொறியாக மட்டுமல்ல, எரியும் எரிமலையாக வெடிக்கத் தயாராக உள்ளது. அந்த வெடிப்பு பாஜக அரசை அரசியல் மேடையிலிருந்து சாம்பலாக்கும்.
சிறு சலுகைகளால் மக்களின் வேதனை அடங்காது. ஜிஎஸ்டி குறைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். மக்களின் வாழ்வைத் தொடும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளிலும், ஒவ்வொரு சேவையிலும் இந்த சுரண்டல் வரி முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் குரல் போர்க் குரலாக வெடித்து, பாஜக ஆட்சியை வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே தள்ளித் தீர்க்கும்.
மக்களின் குரல் இனி ஒலியல்ல. அது நெருப்பு. அந்த நெருப்பு பாஜக அரசின் ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே நடத்தி வருகின்றனர்.
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.
இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடர் வெளியீட்டை அறிவித்துள்ளது. வரவிருக்கும் இந்த மிஸ்ட்ரி த்ரில்லர் தொடரான The Game: You Never Play Alone வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இத்தொடரை தீப்தி கோவிந்தராஜன் எழுத்தில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். Applause Entertainment – Netflix India இணந்து இத்தொடரை தயாரித்துள்ளது.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் உடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் மற்றும் ஹேமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நாம் வாழும் டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதையாக இது இருக்கும் என தயாரிப்பாளர்கள் விளக்கியுள்ளனர்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பெண் கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சி தான் தொடரின் முக்கிய அம்சம். இந்த தொடர் அக்டோபர் 2, 2025 அன்று Netflix-ல் வெளியாகிறது.
- பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
- 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்டமாக சுங்குவார் சத்திரம் வரை பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ பணி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மொத்தம் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:
சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்பு: ரூ.16 கோடி.
வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள்: ரூ.13.40 கோடி.
இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.
இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது.
- அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
- இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.
- 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமல்.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடுகையில்,"ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






