என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பிரச்சாரம்"

    • தமிழகம் முழுவதும் நாளை முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
    • விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார்.

    2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.

    முன்னதாக பிரசார வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது.

    உங்கள் விஜய் நான் வரேன் என்ற வாசகத்துடன் பனையூரில் இருந்து பிரச்சார வாகனம் புறப்பட்டது.

    அதன்படி, திருச்சியில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.

    • தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்.
    • த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டம்.

    வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சுற்றுப்பயணத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக 5 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, முதல் வாரம்- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் எனவும், 2வது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, 3வது வாரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, 4வது வாரம்- திருப்பூர், ஈரோடு, நீலகிரி; 5வது வாரம்- திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    • பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில், நவ 9-

    தேசிய சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 9-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது.

    இதனையொட்டி சட்டப் பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு, அதன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவருமான கார்த்திகேயன் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய், குடும்ப நல நீதிபதி சுதாகர், முதன்மை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளருமான சாந்தினி, சார்பு நீதிபதிகள் அசன் முகமது, சிவசக்தி, சுந்தர கமலேஷ் மார்த்தாண்டம், தாயுமானவர், கீர்த்திகா, மணிமேகலை, நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவர் பால ஜனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பிரச்சார வாகனம் குமரி மாவட்டத்தில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்தியா முழுவதும் வருடம் தோறும் 4 முறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசமாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×