என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
- 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்டமாக சுங்குவார் சத்திரம் வரை பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ பணி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மொத்தம் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:
சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்பு: ரூ.16 கோடி.
வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள்: ரூ.13.40 கோடி.
இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.
இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது.
- அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
- இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.
- 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமல்.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடுகையில்,"ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.
புதுடெல்லி:
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
- கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
- 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் வரிசையில் மூன்று புதிய வேரியண்களைச் சேர்த்துள்ளது. இது மிட்ரேஞ்ச் மின்சார SUV பிரிவில் அதன் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. புதிய வேரியண்ட்கள் Excellence (42 kWh), Executive Tech (42 kWh) மற்றும் Executive (O) (51.4 kWh) ஆகும்.
கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றில் 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும். இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் ரேஞ்ச் ARAI சான்றளிக்கப்பட்டவை ஆகும்.
புதிய Excellence (42 kWh) வேரியண்ட் லெவல் 2 ADAS, 360-டிகிரி வியூ மானிட்டர், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டேஷ் கேமரா, பின்புற வயர்லெஸ் சார்ஜர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள், முன்புற இருக்கைகள் வென்டிலேஷன் வசதி மற்றும் மடிக்கக்கூடிய செட்பேக் மேசையுடன் வருகிறது.

கிரெட்டா எலெக்ட்ரிக் Executive Tech (42 kWh) காரில் குரல்-செயல்படுத்தப்பட்ட பனோரமிக் சன்ரூஃப், இகோ-லெதர் சீட்கள், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள் மற்றும் பின்புறம் சன்ஷேட் விண்டோ போன்ற அம்சங்கள் உள்ளன. அதே நேரத்தில் Executive (O) (51.4 kWh) காரில் நீண்ட தூர பேட்டரி மற்றும் ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.
அனைத்து கிரெட்டா எலெக்ட்ரிக் வேரியண்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியை அடாப்டர் வழியாகப் பெறுகின்றன. அதே நேரத்தில் டாப் எண்ட் வேரியண்ட்களில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த கார்களில் ஹூண்டாய் தற்போது மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
- அமித் மிஸ்ரா 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
- இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (42), அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.
அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2017-ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.
அமித் மிஸ்ரா ஓய்வு குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காட்டி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.
- ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம், தனது ரியல்மி 15 சீரிசின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மி 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் IP66/68/69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.
அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.79 மில்லிமீட்டரிலும் 181 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.
புகைப்படங்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ இரேசர் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 31 நிமிடங்களில் 50% சார்ஜுக்கு 60W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,999 என துவங்குகிறது. ரியல்மி 15T ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 8-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
- ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களால் சிலருக்கு நன்மையும், சிலருக்கும் தீமையும் ஏற்படுகிறது. இது சிலரது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் அரசியலிலும் நிகழத்தான் செய்கிறது.
ஆளும் கட்சி குறித்து எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசும் பிரச்சனைகள், ஆளுங்கட்சியான பிறகு எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இது சிலருக்கு நன்மையாகவும் இருந்திருக்கிறது. சிலருக்கு தீமையாகவும் இருந்திருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கு அரசியல் கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இதுபுறம் இருக்க... நல்லது யார் சொன்னாலும், செய்தாலும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழையும் பொழியத்தான் செய்கிறது.

அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில், இன்று ஜிஎஸ்டி கவுன்சில் தனது விவாதங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அது தற்போது வைரலாகிறது.
காரணம், நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விகிதம் 18 சதவீதம் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தான்.






