என் மலர்tooltip icon

    இந்தியா

    • வாக்குத் திருட்டு நடப்பது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்
    • இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும்

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.

    கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.

    இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.

    செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்து குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் கர்நாடக சிஐடியிடம் 1 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்" என்று கெடு விதித்தார்.

    • கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
    • இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த கொதாபாய் பேசும் வீடியோவை வெளியிட்டார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை மேடையில் ஏற்றி ராகுல் காந்தி ஆதாரங்களை கொடுத்தார். யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வரவைத்து ஊடகங்களிடம் காட்டினார்.

    மேலும், கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ராகுல் காந்தி, இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த பெண் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, " தேர்தல் ஆணைய இணையதளத்தில் இரண்டு விண்ணப்பங்கள் 36 வினாடிகளில் தாக்கல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. தயவுசெய்து இந்தப் படிவங்களை நிரப்ப முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று பாருங்கள். இந்திய இளைஞர்களே, முயற்சி செய்து பாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு படிவங்களை 36 வினாடிகளில் நிரப்ப முயற்சிக்கவும். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

    நான் குறிப்பிட்டுள்ள இந்த நபர் படிவத்தை நிரப்பிய நேரத்தை கவனியுங்கள். அவர் அதிகாலை 4:07 மணிக்கு எழுந்து திடீரென 38 வினாடிகளில் இரண்டு படிவங்களையும் நிரப்பியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது. ராகுல் காந்தி இன்று வருவேன், உண்மையை சொல்வேன்., ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்
    • இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 1,00,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள், வித்தியாசமான தந்தை பெயர்கள், வீட்டு எண்களுடன் உள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    வாக்குத் திருட்டு நடப்பதும், அதை யார் நடத்துவது, எங்கிருந்து நடத்துகிறார்கள் என அனைத்து தகவல்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும். பா.ஜ.க.-வை வெற்றிபெற வைக்க அவர் அதை அனுமதித்தார் என்றும், தகவல்கள் வெளிவந்த பிறகும் அதை மறைக்கிறார்

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்

    இந்த முறைகேடுகள் கர்நாடகாவில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களிலும் இதே போன்ற முறைகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    • கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர்.
    • 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார்

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை

    கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.

    தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது . இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்
    • இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.

    டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் , "இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் மோசமானம காயங்களை ஏற்படுத்தியுள்ளன, அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கும். நேற்று மாலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பயங்கரமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

    இந்த பேரிடர் நேரத்தில், சவாலான சூழ்நிலைகளிலும் கூட சாலைகளில் இருந்து குப்பைகளை அகற்றும் அனைத்து அதிகாரிகள், NDRF-SDRF பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ருபிந்தர் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார்.
    • ருபிந்தரின் மூத்த சகோதரி கமல் கைரா புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்தார்.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியை சேர்ந்த பெண் ருபிந்தர் கவுர் பாந்தர். 71 வயதான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

    இந்நிலையில் ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கிரேவாலும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ருபிந்தருடனான பழக்கம் காதலாக மாறி உள்ளது.

    ருபிந்தரை பார்க்க கிரேவால் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த நிலையில் கிரேவால் திருமணத்தை தனது சொந்த ஊரான இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள தனது கிராமத்தில் வைத்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ருபிந்தர் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார். அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லாததால் சந்தேகமடைந்த ருபிந்தரின் மூத்த சகோதரி கமல் கைரா புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் மாயமான ருபிந்தரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கிரேவாலின் செல்போனில் இருந்து குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு அழைப்புகள் சென்றதை கண்டுபிடித்த போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர்.

    விசாரணையில் அவர் கிரேவால் தூண்டுதலின் பேரில் ருபிந்தரை எரித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ருபிந்தரை காதலிப்பதுபோல் நடித்து கிரேவால் அவரிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்றுள்ளார்.

    ருபிந்தரிடம் இருந்து மேலும் பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவரை இந்தியாவுக்கு வரவழைத்த கிரேவால் பஞ்சாப்பின் மல்காபட்டி பகுதியை சேர்ந்த சுக்ஜீத் சிங் சோன் என்பவரை அணுகி உள்ளார். அவரது திட்டப்படி இந்தியா வந்த ருபிந்தரை சுக்ஜீத் சிங் சோனு கொலை செய்துவிட்டு அவரது உடலை டீசல் ஊற்றி எரித்துள்ளார்.

    எஞ்சிய பகுதிகளை கிராமத்தில் உள்ள வடிகாலில் வீசிதாக சுக்ஜீத் சிங் சோன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும் ருபிந்தரை கொலை செய்வதற்காக கிரேவாலிடம் இருந்து ரூ.50 லட்சம் பேரம் பேசியதாகவும், அதை நம்பி அவரை கொலை செய்ததாகவும் சுக்ஜீத் சிங் சோன் போலீ ரிடம் தெரிவித்தார்.

    அவரை கைது செய்த போலீசார் ருபிந்தரின் எலும்பு கூடுகளை மீட்டு, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சரஞ்சித் சிங் கிரேவாலை தேடி வருகின்றனர். 

    • மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார்.
    • மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார்.

    ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தீபக்குமார் ரவுத். இவரது மனைவி சுபமித்ரா சாஷூ. இவர் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்தார்.

    கணவன்-மனைவிக்கு இடையே ரூ.10 லட்சம் கடன் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் காரில் சென்றனர். அப்போது மீண்டும் தகராறு வந்ததால் ஆத்திரம் அடைந்த தீபக் குமார் ரவுத் மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுபமித்ரா சாஷூ இறந்தார்.

    பின்னர் அவர் மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார். இதையடுத்து புவனேசுவரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கியோஞ்சி என்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் சுபமித்ரா உடலை குழி தோண்டி புதைத்து விட்டு அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமி தரிசனம் செய்த தீபக்குமார் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

    மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவியை காணாததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சுபத்ராவின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில் அவர் வெளியிட்ட பதிவில் கணவருடன் சண்டை இருந்து வந்ததும், மன அழுத்தம் காரணமாக வாரணாசி, மதுரா உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

    இது பற்றி விசாரித்த போது மனைவியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தம் நமது தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்கிறோம். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

    • இஸ்லாமிய பண்டிகையின் போது மோடியின் தாயார் அப்பாசுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.
    • அப்பாஸும் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியும் ஒரே வகுப்பில் படித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளில் அவருடைய ஆரம்ப கால நண்பர் அப்பாஸ் பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிரதமர் மோடி 2022-ம் ஆண்டு தனது தாயார் ஹீராபென் பற்றிய பதிவில் எனது வீட்டில் வளர்ந்த அப்பாஸ் மற்றும் தனது குழந்தைப் பருவ நினைவுகளை பதிவிட்டார். அப்போது தான் அப்பாஸ் பற்றிய தகவல் வெளியானது.

    பிரதமர் மோடியின் எளிமையான குடும்பம் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட் நகரில் வசித்து வந்தது. பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸின் நண்பர் மியான் பாய். இவருடைய மகன் அப்பாஸ். மியான் பாய் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவருடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. அவருடைய மகன் அப்பாஸின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவரை மோடியின் தந்தை தாமோதர்தாஸ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அப்பாஸ், பிரதமர் மோடி மற்றும் அவருடைய சகோதரருடன் நட்புடன் பழகினார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    ஆண்டுதோறும் ரம்ஜான் உள்ளிட்ட இஸ்லாமிய பண்டிகையின் போது மோடியின் தாயார் அப்பாசுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.

    அப்பாஸும் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியும் ஒரே வகுப்பில் படித்தனர். இருவரும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். பின்னர் அப்பாஸும், பங்கஜ் மோடியும் ஒன்றாக அரசு வேலையில் சேர்ந்தனர். 2022-ம் ஆண்டு அப்பாஸ் பணி ஓய்வு பெற்றார்.

    தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் அவருடைய மூத்த மகனுடன் வசித்து வருகிறார்.

    தனது வாழ்க்கையை சிறந்ததாக அமைக்க மோடியின் குடும்பம் ஆழமான பங்கு வகித்தது. மோடியின் தாயார் சொந்த பிள்ளையை போல் என்னிடம் பாசமாக இருப்பார் என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, அப்பாஸின் நட்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.

    பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.

    • வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
    • பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.

    பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள்.
    • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.

    பொக்லைன் எந்திரத்தை, பள்ளம் தோண்டுதல், கட்டிட வேலைகள் உள்ளிட்ட கரடு முரடான பணிகளில் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். விருந்தில் சமையல் பாத்திரத்தை கிளறிவிடுவதற்காக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு விசித்திர காட்சி இணையத்தில் பரவி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது.

    ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள். அதை அடிப்பிடிக்காமல் கிளறி விடுவதற்கு கரண்டிக்குப் பதிலாக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி இருக்கும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது எங்கு படமாக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்பு இல்லை. இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. பொக்லைன் எந்திரத்தின் இத்தகைய தனித்துவமான பயன்பாட்டைப் பார்த்து பலரும் வாயடைத்துப் போனாலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை கேள்வியாக எழுப்பினர்.



    ×