என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி மழை"

    • திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    டிட்வா புயல் காரணமாக திருப்பதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    பலத்த மழையால் பாபவிநாசம், ஸ்ரீவாரி பாதத்திற்கு செல்லும் வழிகளை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர். மேலும் அலிபிரியில் இருந்து மலைக்குச் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுமென பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பலத்த மழையால் திருப்பதி மலையில் உள்ள கோகர்ப்பம், பாப விநாசம், ஆகாச கங்கா, குமாரதாரா, பசுபதாரா அணைகள் முழுமையாக நிரம்பியது. கோகர்ப்பம், பாப விநாசம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மழையில் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர். 25,027 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • திருப்பதியில் நேற்று 76,343 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் குளிர்ந்த காற்று வீசுகிறது. தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி தரிசனம் செய்தனர். அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதால் தங்கும் விடுதி கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 76,343 பேர் தரிசனம் செய்தனர். 18,768 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கடும் குளிர், குளிர்ந்த காற்று வீசுவதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
    • திருப்பதியில் நேற்று 75,740 பேர் தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் திருப்பதி மலையில் கபில தீர்த்தம் மற்றும் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இவற்றில் இருந்து பொங்கும் பால் நுரையுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலை முழுவதும் பச்சை பட்டு போர்த்தியது போல் பச்சை பசேல் என ரம்யமாக காட்சி அளிக்கிறது.

    தரிசனத்திற்கு பஸ், கார், வேன்களில் செல்லும் பக்தர்கள் மற்றும் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சி மற்றும் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் மலைகளை ரசித்தபடி செல்கின்றனர். நீர்வீழ்ச்சிகளில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    கடும் குளிர், குளிர்ந்த காற்று வீசுவதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 75,740 பேர் தரிசனம் செய்தனர். 34,958 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.
    • ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திருமலையில் திடீரென் ஆலங்கட்டி மழை பெய்தது.

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.

    மழைக்காக மண்டபங்களில் ஒதுங்கியிருந்த பக்தர்கள் ஆலங்கட்டி மழையை சேகரித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளும் ஐஸ் கட்டிபோல் குண்டு தரையில் கிடந்த ஆலங்கட்டி மழையை சேகரித்து விளையாடினர்.

    திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 57,354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,398 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×