என் மலர்tooltip icon

    இந்தியா

    • முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத உயர்வை அறிவித்தார்.
    • மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார்.

    இந்தத் திட்டம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

    முன்னதாக, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிதிஷ் குமார் வெளியிட்டிருந்தார்.  

    • 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
    • சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.

    மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.

    சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
    • மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.

    வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.

    மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.

    மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.

    • சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன.
    • அடுத்த ஐந்து வருடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் பார்க்க முடியாது என எக்ஸ் பக்கத்தில் பதிவு.

    பெங்களூருவில் இயங்கி வரும் BlackBuck நிறுவனத்தின் சி.இ.ஓ. ராஜேஷ் யபாஜி. இவர் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவர் தனது இணைய தள பக்கத்தில் "9 வருடமாக ORR (பெலாந்தூர்) பகுதியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இங்கு தொடர்ச்சியாக இயங்க மிகவும் கடினமாக உள்ளது. இதனால் வெளியேற முடிவு செய்துள்ளோம். பெங்களூரு சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. அதனால் என்னுடைய சக பணியாளர்கள் ஒன்வே வழியில் அலுவலகத்திற்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அடுத்த ஐந்து வருடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் பார்க்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதில் அளிக்கையில் "தொழில் பிரச்சனையாக கூட நிறுவனத்தின் இடத்தை மாற்றலாம். பெங்களூரு வழங்கும் திறமையானவர்கள் மற்றும் வசதிகளுடன் திருப்தி இல்லை என்றால், யார் வேண்மென்றாலும் வெளியேறலாம். ஆனால், அரசு மிரட்ம முடியாது. அரசை பிளாக்மெயில் செய்வது வேலைக்காது. நாம் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். இதை மனதில் வையுங்கள், யாரும் பெங்களூருவில் இருந்து வெளியேற மாட்டார்கள்." என்றார்.

    • முன்னாள் கணவருடன் பிறந்த குழந்தையை கேலி செய்ததால் விரக்தி.
    • குழந்தையை கொலை செய்தால்தான் காதலுடன் வாழ முடியும் என்பதால் கொடூர முடிவு.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி (வயது 28). இவர் கணவரை விட்டு பிரிந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது.

    அஞ்சலி அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார். அதே ஓட்டலில் வேலைப் பார்க்கும் அல்கேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் Live-in பார்ட்னராக வசித்து வந்துள்ளது. இவர்களுடன் 3 வயது குழந்தையும் வசித்து வந்துள்ளது. அஞ்சலியின் குழந்தை அல்கேஷ்க்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. குழந்தையையும், அஞ்சலியையும் அல்கேஷ் கேலி செய்துள்ளார். இதனால் அஞ்சலிக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    அல்கேஷ் உடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், தனது மகளை கொலை செய்ய வேண்டும் என அஞ்சலி முடிவு செய்துள்ளார். இதனால், குழந்தையை தாலாட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் தோளில் தூக்கிக் கொண்டு வசித்து வந்த இடம் அருகே உள்ள ஏரிக்கு சென்றுள்ளா்ர. ஏரியில் பெற்ற குழந்தை என்ற கூட பார்க்காமல் தூக்கி வீசியுள்ளார்.

    அத்துடன் நள்ளிரவில் குழந்தையை காணவில்லை என்று நடுரோட்டில் அங்கும் இங்குமாக அழைந்து தேடுவது போன்று நாடகமாடியுள்ளார். போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட, கிடுக்குப்பிடி விசாரணையில் அஞ்சலி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    அஞ்சலியை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஞ்சலியுடன் சேர்ந்து அல்கேஷும் குழந்தையை தேடியுள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்ந்து உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேதமைடைந்த விஷ்ணு சிலையை சீரமைத்து மீண்டும் நிறுவக்கோரி மனு
    • கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள் என கவாய் கருத்து தெரிவித்திருந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவன வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. இப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இந்த நிலையில் நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவால் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக நான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் சித்தரித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் ஒருவர் தெரிவித்தார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.

    • அமெரிக்கா இந்திய பொருட்களுக்க பரஸ்பர வரியாக 25 சதவீதம் அமல்படுத்தியது.
    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், 25 சதவீதம் தண்டனை வரியாக விதித்தது.

    அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாததால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுப்பு தெரிவித்ததால் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி தண்டனை (Penal) வரி என அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இது பொருளாதாரத் தடை என விமர்சிக்கின்றன. இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா 25 சதவீத வரியை நீக்கலாம் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

    கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வி. ஆனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நாம் அனைவரும் வேலையில் இருக்கிறோம். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வரி விதிப்பு குறித்து பேச இருக்கிறேன். ஒரிஜினல் பரஸ்பர 25 சதவீதம் வரி, தண்டனை 25 சதவீதம் வரை ஆகியவை நாம் எதிர்பார்க்காதது.

    புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இரண்டாவது 25 சதவீத வரிக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 30 க்குப் பிறகு தண்டனை வரி இருக்காது என்று எனது உள்மனது சொல்கிறது. இதற்கான குறிப்பிட்ட எந்த காரணமுல் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் அபராத மற்றும் பரஸ்பர வரி விதிப்பு குறித்து ஒரு தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர் FIR பதிவு.
    • தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் சாக்கு போக்கு தேவையில்லை. கர்நாடக மாநில சிஐடி-யிடம் ஆதாரங்களை வெளியிடுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர், உள்ளூர் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக சிஐடி 18 மாதங்களில் ஆதாரங்களை கேட்டு 18 கடிதங்கள் எழுதியுள்ளது. அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக தேர்தல் ஆணையம் பலமுறை வேண்டுகோள் விடுத்தது. தலைமை தேர்தல் ஆணையர் அதை தடுத்துள்ளார்.

    ஐ.பி., டிவைஸ் போர்ட்ஸ், ஓடிபி டிரையல்ஸ் போன்றவை மறைக்கப்பட்டன.

    வாக்கு திருட்டு பிடிபடவில்லை என்றால், 6018 வாக்குகள் நீக்கப்படிருக்கும். எங்களுடைய வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சாக்கு போக்கு விளக்கத்தை நிறுத்தவும். இப்போதே கர்நாடகா சிஐடி-க்கு ஆதாரங்களை கொடுக்கவும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
    • தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயர் நீக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த நிலையில், வாக்கு திருட்டு மெஷினை வெறுமன மேற்பார்வையிட்டு கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். வாக்கு திருடர்களால் நிர்வகிக்கப்படும் வாக்கு திருட்டு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் மேற்பார்வையிட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை

    கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார். அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார்.

    மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.

    தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    அதேவேளையில் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.

    2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது. ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" தெரிவித்துள்ளது.

    • ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.

    கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.

    இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.

    செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.

    2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.

    ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி 40 நிமிடங்களுக்கு மேலாக செய்தியாளர்கள் முன்னிலையில் அளித்த விரிவான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு விளக்கம் ஏற்புடையதா?

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியும் எந்த ஆதாரங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. 1 வாரத்திற்குள் கர்நாடக சிஐடி கேட்ட ஆதாரங்களை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் கேடு விதித்துள்ளார்.

    2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் நடந்ததாகவும் இந்த விஷயத்தை விசாரிக்க FIR பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.

    ஆனால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு ஏதேனும் கண்டறியப்பட்டதா? இல்லையா? என்பதை குறித்து தேர்தல் ஆணையம் தனது பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.

    தேர்தல் ஆணையம் என்பது இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அந்த தூணின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான விரிவான பதிலை அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆதாரம் கேட்கும் தேர்தல் ஆணையம், முதலில் அவர் கேட்கும் ஆதாரங்களை வெளியிட்டு தன்னுடைய நம்பக தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு குடிமக்களின் எண்ணமாகும்.

    • வாக்குத் திருட்டு நடப்பது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்.
    • தகவல்கள் வெளிவந்த பிறகும் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் அதை மறைக்கிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.

    கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.

    இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.

    செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.

    2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.

    ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×