என் மலர்
இந்தியா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. வழக்கு 4-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- த.வெ.க. தரப்பில், ’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
- அது தொடர்பான விவரங்களையும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது த.வெ.க. தரப்பில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக எங்களுடைய மனுவில் நாங்கள் தகவல்களை எடுத்துரைத்து உள்ளோம். ஏற்கனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான விவரங்களையும் நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வைத்துள்ளோம்' என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி, 'அங்கன்வாடி ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை விசாரிக்கிறோம்' என தெரிவித்து வழக்கை 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
வருகிற 4-ந்தேதி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.






