என் மலர்
இந்தியா
- ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
பொக்லைன் எந்திரத்தை, பள்ளம் தோண்டுதல், கட்டிட வேலைகள் உள்ளிட்ட கரடு முரடான பணிகளில் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். விருந்தில் சமையல் பாத்திரத்தை கிளறிவிடுவதற்காக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு விசித்திர காட்சி இணையத்தில் பரவி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது.
ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக ராட்சத அண்டாவில் குழம்பு சமைக்கிறார்கள். அதை அடிப்பிடிக்காமல் கிளறி விடுவதற்கு கரண்டிக்குப் பதிலாக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி இருக்கும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது எங்கு படமாக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்பு இல்லை. இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனடியாக வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. பொக்லைன் எந்திரத்தின் இத்தகைய தனித்துவமான பயன்பாட்டைப் பார்த்து பலரும் வாயடைத்துப் போனாலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை கேள்வியாக எழுப்பினர்.
- அந்த காட்சி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் பரவியது.
- இளம்பெண்ணின் இந்த செயல் இணையவாசிகளிடம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது.
ஒரு இளம்பெண், தனது தந்தை மீதான நேசத்துக்காக செய்த ஒரு செயல் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
ஒருவிழாவில் கலந்து கொண்ட அந்த இளம்பெண் விருந்தில் சாப்பிடுகிறார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட உணவில் இருந்த பொரித்த கோழி இறைச்சி துண்டை (சிக்கன் லெக்பீஸ்) எடுத்து தனது மணிபர்சில் மூடி வைக்கிறார். அந்த காட்சி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் பரவியது.
அவர் முதலில் அந்த இறைச்சி துண்டை டிஷ்யூ பேப்பரில் சுற்றி, பின்னர் அதை தனது கைப்பைக்குள் வைக்கிறார். இதை வெளியிட்டவர், ''அப்பாவின் தேவதையின் செயலால் நீங்கள் ஒரு ஆச்சரியப்பட போகிறீர்கள்'' என்ற குறிப்புடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நம்மூரில் விருந்து நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது சுவையான உணவுப் பண்டங்களை குழந்தைகள் அல்லது வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள் என்று தாய்மார்கள் தனியே எடுத்து வைத்து கொண்டு செல்வதை பார்த்திருப்போம். அதேபோன்று யதார்த்தமாக நடந்த இளம்பெண்ணின் இந்த செயல் இணையவாசிகளிடம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது.
- 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
- ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.
வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.
இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
- 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.
சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
- காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.
மகாராஷ்டிர காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கட்சிரோலி மாவட்டத்தில் எடாபள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்திற்கு அருகில் காட்டிற்குள் மாவோயிஸ்டுகளின் குழு முகாமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) காலை காவல்துறையினர், சிஆர்பிஎஃப் மற்றும் நக்சல் ஒழிப்பு கமாண்டோ படைப்பிரிவினர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, தேடுதல் வேட்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
அவர்கள் உடல்களில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, பிஸ்டல், வெடிபொருட்கள், நக்சலைட் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இறந்தவர்கள், உள்ளூர் ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களின் தலைக்கு முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் மகாராஷ்டிரா காவல்துறை வெகுமதி அறிவித்திருந்தது.
2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை கட்சிரோலியில் 93 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 75 பேர் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினருடனான மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
- விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில் 7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.
உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கடந்த 12ஆம் தேதி நடிகை திஷா படானி வீட்டில் துப்பாக்கிசூடு.
பாலிவுட் நடிகை திஷா படானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் கடந்த 12ஆம் தேதி அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். அப்போது திஷா படானியின் தந்தை ஜெக்திஷ் சிங் படானி (ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அவரது தாய் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டது.
இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பதிவிட்டிருந்தார். இவருக்கு கிரிமினல் அமைப்பு நெட்வொர்க் உடன் தொடர்பு உள்ளது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் தேடிவந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையின் நொய்டா குழு மற்றும் டெல்லி போலீசின் குற்ற புலனாய்வுத்துறை குழு ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
அப்போது காசியாபாத்தில் இருவரும் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றனர். அப்போது போலீசார் நோக்கி இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் போலீசாரும் தாக்கல் நடத்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி. நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது.
- லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவாகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபா சமூகத்தினரை, எஸ்.டி. பட்டியலில் சேர்க்க அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எஸ்.டி. பிரிவில் உள்ள சில சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மாநில அரசு பரிந்துரைதான் செய்ய முடியும். மாநில அரசுதான் முடிவு எடுக்கும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
இந்த நடவடிக்கை முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே செய்யப்பட்டது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு இது தொடர்பாக முடிவு செய்யும். மாநில அரசான நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இந்த சமூகம் வர வேண்டியது இருந்தால், அவர்கள் சேர்க்கப்படுவார்கள். இல்லை என்றால், அவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது. லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவினராகும்.
கர்நாடகா மாநிலத்தில் ஐந்து ஓபிசி பிரிவுக்கு 32 சதவீத இடதுக்கீடு வழங்கப்படுகிறது. குருபா 2ஏ பிரிவின் கீழ் வருகிறது. 2ஏ பிரிவுக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று, டெல்லி அரசின் 17 பொது நலத்திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக. அதன்மூலம் அவர்களுடைய உதவியோடு தேர்தலில் வெற்றிபெற விரும்புகிறது. ராகுல் பாபாவும், காங்கிரஸ் கட்சியியும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை தொடங்கியுள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை. ஊடுருவல்காரர்கள் உதவியோடு தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறார்கள். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான SIR செயல்பாட்டை பாஜக ஆதரிக்கிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது.
- பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர்.
புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.
நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.
பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
140 கோடி இந்தியர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் என தெரிவித்தார்.






