என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு அதிகாரி"
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.
- பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
- உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவின் பேரில் பரமத்திவேலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள் மற்றும் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாதம் மற்றும் மீதமாகி போன உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தனர். ஆய்வுக்கு பின்னர் சில உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.






