என் மலர்
இந்தியா
- உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து, விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் இன்று விசாரித்தார்.
அப்போது, தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின.
- இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.
2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வுக்கும் இஸ்ரேலின் மொசாத்-திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பியான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "2004 மக்களவை தேர்தலில் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-ல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.
காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-ல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.ஐ.ஏ-வும் மொசாத்தும் முடிவு செய்தன.
இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.
மத்தியில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின" என்று தெரிவித்தார்.
- அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
- தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.
வடகிழக்கு பருவமழை குறித்து சென்னையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது அவர்," தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் சில மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.
மீட்பு மற்றும் நிவாரண மையங்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.
- ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு.
- போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ECR மற்றும் OMR-ஐ இணைக்கும் வகையில் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியது
ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
- வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.
SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
- ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
அதில், ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் பெரியகருப்பனை சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
- மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
- புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:-
சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று வீசும்.
புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இப்போதைக்கு புயலாக இருந்தாலும் நகர்வை பொருத்துதான் மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பது தெரியும்.
இருப்பினும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.
இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.
- புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
- விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.
அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.
அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
- ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது IIDEA
- இது இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் (IIDEA) 2026 இன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட IIDEA, இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.
அமெரிக்காவும் ஜப்பானும் பார்வையாளர் நாடுகளாக இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் இந்த பொறுப்பை ஏற்கிறார்.
இதன் தலைவராக, ஞானேஷ் குமார் 2026 வரை அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பந்தமாக தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.
அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனயடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
- சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம், நவ.27-
சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






