என் மலர்
நீங்கள் தேடியது "இரும்பு பாலம்"
- ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு.
- போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ECR மற்றும் OMR-ஐ இணைக்கும் வகையில் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியது
ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொன்மனை அயந்தி பகுதியில் சேதமடைந்துள்ளது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவட்டார் :
குமரி மாவட்டம் பத்மநாப புரம் தொகுதிக்குட்பட்ட பொன்மனை பேரூராட்சி அயந்தி பகுதியில் ஒரு இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பட்டணங் கால்வாய் சானல் செல்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் இந்த சானல் வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இந்த இரும்பு பாலமானது, பொதுபணித்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
சானலின் மறுபக்கம் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் தங்கள் தேவைக்கு வெளியே வர வேண்டும் என்றால் இந்த பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். தற்போது இந்த இரும்பு பாலம் துரு பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் மைய பகுதியில் பெரிய அளவில் ஓட்டை உள்ளது. தினமும் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடன் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகிறார்கள்.
எனவே இந்த இரும்பு பாலத்தை மாற்றி விட்டு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராl; lங்களை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட் டது. அதன்பிறகு அந்த பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டுவதற்க்கு டெண்டரும் போடப்பட்டது. டெண்டர் எடுத்த அரசு ஒப்பந் தக்காரர், நிதி போதாது என்று பணியை தொடங்காமல், அப்படியே நிறுத்தி விட்டார். அதன்பிறகு தற்காலிமாக பாலத்தின் மேல் பகுதியில் 2 பக்கமும் கைப்பிடித்து செல்வ தற்கு இரும்பு பைப்புகள் மாட்டப்பட்டன. சில மாதங்களில் அந்த இரும்பு பைப்புகள் உடைந்து தொங்கி கொண்டு நிற்கிறது.
தற்போது மழை காலம் என்ப தால் சானலில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இந்த இரும்பு பாலத்தின் மீது தான் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் செல்ல வேண்டும். மாற்றுபாதை கிடையாது. தினமும் வயதான முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவி களும் இந்த பாலத்தின் மீது நடந்து செல்லும்போது பயத்துடன் தான் கடந்து செல்கிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்து நடைபெறும் முன் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான இரும்பு பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 3-வது வார்டுக்கு உட்பட்டது அரியாம்போடு. இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
- பாலத்தை சீரமைக்க வேண்டி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தும் போது, அதிகாரிகள் வந்து பேசி மாற்று பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுப்பார்கள்.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பேரூராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்டது அரியாம்போடு. இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
பேச்சிபாறையில் இருந்து செல்லும் கோதையாறு பரளியாறு சானல் இந்த பகுதி வழியாக தான் பாய்ந்து மங்கலம், பொன்மனை, சுருளோடு வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது. அரியாம் போடு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக சானலின் மேற்பகுதியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலம் அமைக்க ப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் ஓட்டை விழுந்து உள்ளது.
அரியாம்போடு சானலின் மறு பக்கம் வசித்து வரும் குடும்பங்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த இரும்பு பாலத்தின் வழியாக தான் வர வேண்டும். தினமும் காலை, மாலை வேளை களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பாலத்தின் வழி யாக தான் செல்ல வேண்டும்.
அவர்கள் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் வழியாக சென்று வருகின்ற னர்.எனவே மக்களின் நலன் கருதி பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது ெதாடர்பாக அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:-
பாலத்தை சீரமைக்க வேண்டி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தும் போது, அதிகாரிகள் வந்து பேசி மாற்று பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுப்பார்கள்.
தேர்தல் நேரங்களில் வாக்கை பெறுவதற்கு மாற்று பாலம் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுப்பார்கள். தேர்தல் முடிந்ததும் அதை மறந்து விடுவார்கள். மழை வெள்ளம் காலங்களில் இந்த பாலத்தை தொட்டுதான் தண்ணீர் செல்லும்.
அப்போது இப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு தான் பாலத்தை கடந்து செல்லவேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் சரிசெய்ய டெண்டர் போடப்பட்டது. அதன்பிறகு எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பெரும் விபத்து க்கள் நடைபெறும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை மாற்றி வேறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






