என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு பாலத்தின் மீது அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்
    X

    இரும்பு பாலத்தின் மீது அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்

    • பொன்மனை அயந்தி பகுதியில் சேதமடைந்துள்ளது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    திருவட்டார் :

    குமரி மாவட்டம் பத்மநாப புரம் தொகுதிக்குட்பட்ட பொன்மனை பேரூராட்சி அயந்தி பகுதியில் ஒரு இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பட்டணங் கால்வாய் சானல் செல்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் இந்த சானல் வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இந்த இரும்பு பாலமானது, பொதுபணித்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

    சானலின் மறுபக்கம் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் தங்கள் தேவைக்கு வெளியே வர வேண்டும் என்றால் இந்த பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். தற்போது இந்த இரும்பு பாலம் துரு பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் மைய பகுதியில் பெரிய அளவில் ஓட்டை உள்ளது. தினமும் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடன் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகிறார்கள்.

    எனவே இந்த இரும்பு பாலத்தை மாற்றி விட்டு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராl; lங்களை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட் டது. அதன்பிறகு அந்த பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டுவதற்க்கு டெண்டரும் போடப்பட்டது. டெண்டர் எடுத்த அரசு ஒப்பந் தக்காரர், நிதி போதாது என்று பணியை தொடங்காமல், அப்படியே நிறுத்தி விட்டார். அதன்பிறகு தற்காலிமாக பாலத்தின் மேல் பகுதியில் 2 பக்கமும் கைப்பிடித்து செல்வ தற்கு இரும்பு பைப்புகள் மாட்டப்பட்டன. சில மாதங்களில் அந்த இரும்பு பைப்புகள் உடைந்து தொங்கி கொண்டு நிற்கிறது.

    தற்போது மழை காலம் என்ப தால் சானலில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இந்த இரும்பு பாலத்தின் மீது தான் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் செல்ல வேண்டும். மாற்றுபாதை கிடையாது. தினமும் வயதான முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவி களும் இந்த பாலத்தின் மீது நடந்து செல்லும்போது பயத்துடன் தான் கடந்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்து நடைபெறும் முன் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான இரும்பு பாலத்தை மாற்றி புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×