என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
    • இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது.

    இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

    40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

    நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான, மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.

    குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

    இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
    • பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024ம் ஆண்டில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

    இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

    இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அன்றைய நாள் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வரவுள்ளதால், பிரதமர் மோடியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
    • த்ரிஷ்யம் 3 படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.

    பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் நிறுவன்துடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம் 3' வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.

    பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்க வைத்துள்ளது.

    த்ரிஷ்யம் 3 படத்திற்கு சதீஷ் குருப் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, விநாயக் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் புதிய போஸ்டரை நடிகர் மோகன்லால் பகிர்ந்துள்ளார்.

    • ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் பேசினர்.
    • குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.

    ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என அமெரிக்கா கூறி வந்தாலும், இந்தியா தரப்பில் தெளிவான பதில் இல்லை.

    இதற்கிடையே ஜெர்மனியில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "ரஷியாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

    இந்தியாவுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், கூடுதலாக ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.

    தொடர்ந்து இதே மாநாட்டில் மற்றொரு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரூபியோவின் கூற்றை நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

    ஜெய்சங்கர் கூறியதாவது, "இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும். இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை.

    உலகளாவிய எரிசக்தி சந்தை தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எண்ணெய் கொள்முதல் என்பது அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் அமையாது.

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்களைப் போலவே, கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா என்ற நேரடி கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதையே செய்வார்கள்" என்று முடித்தார். 

    இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 25% இருந்து 18% ஆக குறைந்த வரியை மீண்டும் உயர்த்துவோம் என அமெரிக்கா மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும்.

    2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

    இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

    வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
    • மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.

    இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.

    கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஜன நாயகன் விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்படுகிறது.
    • தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை ஜன நாயகன் படம் வெளியாகவில்லை.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.

    தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை வாபஸ் பெற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது.

    முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    • குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பான மாலைமலர் செய்தியை பகிர்ந்து குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இதுபோன்ற செய்திகள் நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இது பெண்களின் சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் பெண்கள் சமூகத்திற்கு ஒரு வலுவான நல்ல செய்தியை அனுப்புகிறது.

    ஒவ்வொரு பெண்ணும் தனக்காக நிற்க வேண்டும், கட்டாயம் நிற்க வேண்டும். கண்ணியம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க, மற்றவர்கள் உங்களுக்காக அதைச் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். ஒரு துளி கூட உங்களை அவமதிக்கக் காத்திருக்கும் அத்தகைய ஆண்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர்.

    உங்கள் தலையை உயர்த்தி நில்லுங்கள், உலகம் உங்களுடன் இருக்கும். இது எனது வெற்றி மட்டுமல்ல, இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. போதும் போதும். ஒற்றுமையாக நின்று அதை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • அதிபர் மேக்ரான் பிரான்சில் இருந்து 16-ம் தேதி இந்தியா வருகிறார்.
    • 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் திங்கட்கிழமை இந்தியா வருகின்றனர். அதிபர் மேக்ரான் இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. (AI Impact Summit) உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.

    • கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
    • தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.

    போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

    மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • விஜய் கூறியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரணும்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

    அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?

    4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

    முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது.

    பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.
    • காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது.

    நாம் எந்தவொரு செயலை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவோம். இதற்கு காரணம், விநாயகரை வணங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

    அவ்வாறு மன்னன் கோவில் கட்ட பாதுகாவலாக இருந்து வெற்றிகரமாக கட்டி முடிக்க அருள்புரிந்தவர் தான் தலையாட்டி விநாயகர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தலையாட்டி விநாயகர் ஆலயம். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே இவ்வூர், 'ஆற்றூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் 'ஆத்தூர்' என்று மருவியுள்ளது.

    முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர், சிவ தல யாத்திரை சென்றார். அவ்வாறு வசிஷ்ட நதிக்கரைக்கு வந்த வசிஷ்ட முனிவர், அங்கு பல இடங்களில் தவம் இயற்றினார். மேலும் அவர் தவம் இயற்றிய இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன்படி இத்தலம் வந்து தவம் இயற்றிய வசிஷ்ட முனிவர், திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவதை போல, இங்கும் ஜோதி வடிவில் சிவபெருமானின் தரிசனத்தை காண விரும்பினார்.

    அவ்வாறு, அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்பகுதியை கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த சிவ பக்தனாக இருந்த மன்னன், தினமும் சிவபெருமானை வணங்கிய பிறகே தனது அன்றாட வேலைகளை செய்வான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், "நான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் புதைந்து இருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபடு" என்று கூறினார். அதன்படி இவ்விடத்தை தோண்டும் போது, அதில் ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் ஒரு புதையலும் இருந்தது. அந்த புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். அவ்வாறு இக்கோவிலை கட்டும் முன்பு, இத்தலத்தில் உள்ள விநாயகரிடம் உத்தரவு வாங்கிய பிறகே மன்னன் கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளான். மேலும் இந்த விநாயகரே கோவில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோவில் பணிகள் முடிந்த பிறகு, மன்னன் இந்த விநாயகரிடம் வந்து, "கோவில் பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா" என்று கேட்டான். அதற்கு விநாயகர், 'நன்றாக கட்டி இருக்கிறாய்' என்றும் சொல்லும் விதமாக, 'ஆம்' என்று தனது தலையை ஆட்டினாராம். அதனால் தான் இத்தல விநாயகர், 'தலையாட்டி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள தலையாட்டி விநாயகர், தனது தலையை சற்று இடதுப்புறமாக சாய்த்தபடி அருள்பாலிக்கிறார். இவர் 'காவல் கணபதி' என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள், இவருக்கு வஸ்திரங்கள் சாற்றியும், பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். எந்தவொரு புதிய காரியங்கள் தொடங்கும் முன்பும், இத்தல விநாயகரை வணங்கி வேண்டிக் கொண்டால், அச்செயல் வெற்றி அடையும் வரை நம்முடன் இருந்து சிறப்பாக செய்து முடித்து தருவார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

    திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கிரக தோஷங்கள் விலகவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்துக்கு அருகிலேயே தலையாட்டி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

    ×