search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம்.
    • குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நவக்கிரகங்களுக்குள் - மந்திரங்கள் - தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாகிய குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 1-5-24 (புதன்கிழமை) மாலை 5.19 மணிக்கு கிருத்திகை 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து கிருத்திகை 2-ம் பாதம் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். திருக்கணிதப்படி 1-5-24 (புதன்கிழமை) பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

    குழந்தைகள், வம்சவிருத்தி, சுவர்ண (தங்க) லாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் மேஷ ராசியில் நுழைவதால் தேசத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும், ஆஸ்திகம் வளர்ச்சியடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இந்த குருப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தனது ராசியில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதற்கு ஏற்ப, தனித்தனி பலன்கள் கிட்டும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    மேஷம் - பராகிரமம், செல்வம், குடும்பத்தினருக்கு சுகம், தன்னுடைய வாக்கு பலிதமாகுதல்.

    ரிஷபம்- தான் வசிக்கும் தேசத்தில் இருந்து வெளிச்செல்லுதல், சத்ருத்தன்மை.

    மிதுனம்- பொருள் காரணமாக அச்சம் ஏற்படலாம்.

    கடகம் - குழந்தை லாபம், பதவி, லாபம், கவுரவம்.

    சிம்மம் - பொருள், பதவி, துன்பம்.

    கன்னி- அனைத்து விதமான நன்மைகள் ஏற்படும்.

    துலாம் - தாய்க்கு (தாயால்) துன்பம், அரிஷ்டம், பொருள் நஷ்டம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம். இவைகளிலிருந்து விடுபட, தனுசு ராசிக்காரர்கள், மஞ்சள் நிறத்தாலான சுத்த பட்டுத்துணியை அல்லது புடவையை தெய்வ சன்னிதியில் வைத்து விட்டு, அதை எடுத்து வேதாத்யயனம் செய்தவருக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ. அவர்களின் மனைவிக்கோ, தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் வியாதிகள் விலகி ஆரோக்கியம் கிடைக்கும்.

    குரு 8-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய துலாம் ராசிக்காரர்கள் கமண்டலு என்னும் (வெள்ளி) ஜாரி அல்லது வெங்கல கிண்டியை வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    விருச்சிகம் - மங்கள நிகழ்ச்சிகளுக்கான யாத்திரை, பெண்ணால் சுகம், பிள்ளைப் பேறு.

    தனுசு - விரோதிகள் மந்தரிகள் தொல்லை, வியாதி

    மகரம் - குழந்தைச் செல்வம், குழந்தைகளால் நன்மை, நல்லோர் சேர்க்கை. அரசாங்கத்தில் அனுகூலம்.

    கும்பம் - உறவினர்களின் துன்பங்களால் ஏழ்மை, நாலுகால் பிராணிகளால் பயம், போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    மீனம் - இருப்பிட மாறுதல், இஷ்டத்தில் இருந்து பிரிவு, காரியத்தடை.

    குரு 10-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இட மாறுதல் தோஷம் விலக சிம்ம ராசிக்காரர்கள் நர்மதா நதியில் எடுத்த பாண லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அதை தகுந்த நபரிடம் கொடுக்க வேண்டும்.

    பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மேஷம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் மேன்மையைத் தரும். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய மற்ற ராசிக்காரர்கள் குருப் பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும்.

    குருப் பெயர்ச்சி அன்றோ இன்று (வியாழக்கிழமை) புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நாள் அன்றோ காலையில் குளித்து விட்டு தானப் பொருட்களில் ஏதாவது ஒன்றை துளசி மற்றும் தட்சணையுடன் சேர்த்து கையில் வைத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டுக் கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    • குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்து.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

    கஜகேசரி யோகம்:

    குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

    குருச்சந்திரயோகம்:

    சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    குரு மங்களயோகம்:

    குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

    ஹம்சயோகம்:

    சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    சகடயோகம்:

    குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

    சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.
    • லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார்.

    வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.

    லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார்.

    லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.

    2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.

    2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.

    2-ல் உள்ள குரு சில நேரங்களில் சிலருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை வழங்குவார்.

    குரு தனுசிலோ மீனத்திலோ இருக்கப்பெற்று அது, 2-ஆம் இடமாக அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் விற்பன்னராவார்.

    தனுசு, மீனம் தவிர வேறு இடங்கள் 2-ஆம் இடமாகி, அங்கே குரு இருக்கப் பெற்றவர்கள், குடும்ப வாழ்வில் சில தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

    3-ஆம் இடத்தில் உள்ள ஜாதகருக்கு உலோப குணத்தை வழங்குவார். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்படும்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகரை பெண்களிடம் பிரியம் உள்ளவராக உருவாக்கி வைப்பார்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன் ஜாதகரை ஒரு நூலாசிரியராக ஆக்கி வைப்பார்.

    3-ல் உள்ள குருவால் ஜாதகர் சகோதரரால் நலம் பெறவும் சகோதரருக்கு நலம் புரியவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    3-ல் உள்ள வியாழன் ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உரியவராகச் செய்வதற்கு இடமிராது.

    3-ல் உள்ள வியாழ னால் ஜாதகருக்கு ஜீரண சக்தி திருப்திகரமாக அமையாது.

    4-ல் உள்ள குரு சுகமான வாழ்க்கையைத் தருவார்.

    மக்கள் நலம், தாய் நலம், நண்பர்கள் நலம், பணியாட்கள் நலம், குடும்ப நலம் இவைகள் எல்லாம் ஜாதகருக்கு 4-ஆம் இடத்தில் உள்ள குருவால் உண்டாகும்.

    விவசாயத்தின் மூலம் தானியங்களைச் சேர்த்து பொருள் திரட்டக்கூடிய வாய்ப்பு 4-ஆம் இடத்து வியாழன் ஜாதகருக்கு உண்டாக்குவார்.

    4-ல் உள்ள குரு ஜாதகரை உன்னதமானவராக உருவாக்குவார். ஆனால், பகைவர்களால் தொல்லைகளை விளைவிப்பார்.

    4-ல் உள்ள குரு பலம் பெற்றிருக்கும் போது ஜாதகருக்கு மதிப்பும், செல்வமும் உயரும்.

    4-ல் உள்ள குரு புத்திர பாக்கியம் தாமதமாக உண்டாகச் செய்வார்.

    வியாழன் 5-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கையில் உயர்ந்த பதவி அமையும்.

    5-ஆம் இடத்தில் உள்ள குரு புத்திகாரனாக இருப்பதனால் புத்திரப் பாக்கியக் குறைவு ஏற்படும்.

    5-ல் உள்ள குரு சுபக்கிரகங்களோடு சேராமல் பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் புத்திர பாவத்தைப் ெபாருத்த வகையில் சங்கடம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு, பொதுவாக வயிற்றுத் தொல்லையைத் தரக்கூடும்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு, பகைவரை வெற்றி கொள்ளக்கூடிய பராக்கிரமத்தை உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு உடல் பலமோ, சக்தியோ ஜாதகருக்கு முழுமையாக உண்டாகாதவாறு செய்வார். அஜீரணக் கோளாறு ஏற்படவும் செய்வார்.

    6-ல் உள்ள குரு மனைவியின் மூலமாக சிறப்பு உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள வியாழன் வக்ர கதியை அடைந்திருந்தால், ஜாதகருக்கு பகைவர்களால் தொல்லை ஏற்படலாம்.

    7-ல் உள்ள குரு ஜாதகரை, அவரது தந்தையைக் காட்டிலும் சிறப்பான நிலையில் உயர்த்தி வைப்பார்.

    7-ல் உள்ள வியாழன் காரணமாக ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள்.

    ஜாதகர் பெரிய செல்வந்தர் ஆவதற்கு 7-ஆம் வீட்டு வியாழனால் வாய்ப்பு உண்டாகும். மேலும் ஜாதகர் அவரது தந்தையைக்

    காட்டிலும் பெருந்தன்மை மிகுந்த–வராக விளங்கச் சந்தர்ப்பம் உண்டு.

    7-ல் உள்ள குரு, ஜாதகரை மதியூகம் மிக்கவராகவும், முக்கியமான பதவியை வகிக்கச் செய்கிறவராகவும் ஆக்குவார்.

    7-ஆம் இடத்து குருவின் காரண–மாக அந்த ஜாதகர் பெரிய கவிஞனாக முடியும். புகழ் பெறவும் முடியும்.

    8-ல் உள்ள குரு, ஜாதக–ருக்கு உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சம்பாத்தியத்தை உண்டு பண்ணுவார்.

    புனித தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்படக்கூடிய வாய்ப்பு உண்டு பண்ணக்கூடியவர், 8-ஆம் இடத்து வியாழனாவார். ஜோதிடம், குறி சொல்லுதல் ஆகியவற்றில் ஜாதகருக்கு நிபுணத்துவம் உண்டாகும்.

    8-ம் இடத்து வியாழன் காரணமாக ஜாதகருக்கு பொருளாதார நிலையில் முழுமையான சுபிட்சம் இராது. ஆனால், ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

    8-ல் உள்ள குரு நண்பர்களால் ஜாதகருக்கு பொருள் இழப்பு உண்டு பண்ணுவார். வியாதியினால் அல்லல் படவும் நேரும்.

    9-ல் உள்ள வியாழன் ஜாதகரை புனித கருமங்கள் செய்ய வைப்பார். உயர்ந்த பதவியை உண்டாக்கித் தருவார்.

    9-ஆம் இடத்தில் உள்ள வியாழன் மிக்க பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மந்திரியாகவோ, கட்சித் தலைவராகவோ, பிரகாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    9-ல் உள்ள குரு ஜாதகருக்கு தெய்வ பக்தியையும், வேத விற்பன்னர்களைப் போற்றுகின்ற பண்பையும் வழங்குவார்.

    10-ல் உள்ள வியாழன் ஒருவரை குபேரனாக்குவார். அரசாங்க மதிப்பையும் வருமானத்தையும் பெற வைப்பார்.

    10-ல் உள்ள குரு, நேர்வழியில் நடக்கக்கூடிய தன்மையை ஜாதகருக்கு வழங்குவார். இந்த ஜாதகர் பெற்றோரை போற்றி நடப்பவர் ஆவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகருக்கு பல துறைகளிலும் செல்வத்தைத் திரட்டித் தருவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன் குறைந்த அளவில் மக்கட்செல்வத்தை வழங்குவார்.

    11-ம் இடத்தில் உள்ள குரு தனித்திருந்தால் பண வருவாயை சுருக்கி விடுவார்.

    12-ல் உள்ள வியாழன் பாச பந்தங்களில் இருந்து ஜாதகரை ஒதுக்கி வைப்பார். பொதுமக்களின் விரோதம் ஜாதகருக்கு ஏற்படும்.

    12-ல் உள்ள குருவினால் ஜாதகருக்குப் பேச்சு வன்மை குறைந்து விடும். ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்படும். அடிமைப் பணி செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

    12-ம் இடத்தில் உள்ள குரு ஜாதகருக்கு அடிக்கடி பயணங்களை உண்டு பண்ணுவார்.

    12-ம் இடம் மீனமாகவோ, தனுசாகவோ ஆகுமானால் ஜாதகர் பக்திமானாகவும், தர்மவானாகவும் விளங்கவும் செல்வத்தைக் குவிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

    • மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
    • துடைப்பத்தால் மாமன், மைத்துனர் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முதல் நாளில் கன்னியப்ப பிள்ளை பட்டியில் இருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    2-ம் நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின்பு கிராமத்தில் உள்ள மாமன் மைத்துனன் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டும், சணல் சாக்கு கட்டிக் கொண்டும், கயிற்றால் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டும் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின் துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து மாமன், மைத்துனர் உணவுமுறை கொண்டவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களது உறவு வலுப்படும் என்று பல ஆண்டுகளாக இவ்வகை நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த உறவுகள் கூட இத்திருவிழாவின் போது ஒன்று கூடி துடைப்பத்தால் அடித்து உறவை மேம்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

    • பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி கடந்த மாதம் 27-ந் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான், மேஷ ராசியில் இருந்து சுக்ரன் ராசியான ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.11 மணிக்கு மாறினார்.

    முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளி அங்கியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் முன்பு உள்ள பகுதியில் உற்சவர் கார்த்திகை பெண்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    பின்னர் நேற்று மாலை குருபகவான் ரிஷப ராசிக்கு மாறும்போது, மூலவர் மற்றும் உற்சவருக்கும் கோவில் மேல் பகுதியில் உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிகார மகா யாக பூஜை நடந்தது.
    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

     அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    பிரளயநாதசுவாமி

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

    • ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
    • மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

     மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குருப்பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-19 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 10.57 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.03 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்நிதியில் நான்கு கருட சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-பந்தம்

    மிதுனம்-பாசம்

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-பொறுமை

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- முயற்சி

    மகரம்-வரவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-அமைதி

    • தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.
    • குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள்.

    தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.

    ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

    உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    அது தொடர்பான விவரங்கள் வருமாறு:

    தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.

    இவர் சிவன், அவர் பிரகஸ்பதி.

    தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு அதிகாரி.

    தட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.

    தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

    குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

    தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

    சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம் அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

    இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு

    அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...

    தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

    சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள்.

    குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள்.

    கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

    குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.

    இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    என்றாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

    குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம்.

    ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம்.

    அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள்.

    சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள். அதுவும் தவறு.

    குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

    எனவே தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.

    • இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
    • சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருகில் இருக்கும் ஊர் குருவித்துறை.

    இங்கு சித்திரரத வல்லபப் பெருமாள் ஆலயம் உள்ளது.

    குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர்.

    குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணன் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார்.

    இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

    சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோவில் உள்ளது.

    வைஷ்ணவக் கோவிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச் சிறப்பு.

    • இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.
    • சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.

    சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது.

    பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம்.

    வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இங்கு இருக்கும் இறைவன் திரு வலிதாயநாதர், மற்றும் திருவல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    அம்பிகையின் பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற புண்ணிய தலம்.

    தக்கோலம்

    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல்.

    இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.

    சடையோடு கூடிய முகம்.

    சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.

    இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலை நயத்தோடு உள்ளார் தட்சிணா மூர்த்தி.

    • குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
    • இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.

    இத்தலம் கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது.

    நாகப் பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம்.

    வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது.

    தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது.

    இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.

    வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை.

    வியாழபகவானுக்கு குரு பட்டத்தை சிவபெருமான் வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.

    குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.

    திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஜென்ம ஜாதகத்தை வைத்து அனுக்கிரக தட்சணாமூர்த்தியை வழிபட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம்.

    ×