search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா
    X

    துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா

    • மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
    • துடைப்பத்தால் மாமன், மைத்துனர் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முதல் நாளில் கன்னியப்ப பிள்ளை பட்டியில் இருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    2-ம் நாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அக்னிச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின்பு கிராமத்தில் உள்ள மாமன் மைத்துனன் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டும், சணல் சாக்கு கட்டிக் கொண்டும், கயிற்றால் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்டும் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

    அதன் பின் துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து மாமன், மைத்துனர் உணவுமுறை கொண்டவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களது உறவு வலுப்படும் என்று பல ஆண்டுகளாக இவ்வகை நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த உறவுகள் கூட இத்திருவிழாவின் போது ஒன்று கூடி துடைப்பத்தால் அடித்து உறவை மேம்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×