search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    12 ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
    X

    12 ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

    • குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம்.
    • குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நவக்கிரகங்களுக்குள் - மந்திரங்கள் - தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாகிய குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 1-5-24 (புதன்கிழமை) மாலை 5.19 மணிக்கு கிருத்திகை 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து கிருத்திகை 2-ம் பாதம் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். திருக்கணிதப்படி 1-5-24 (புதன்கிழமை) பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

    குழந்தைகள், வம்சவிருத்தி, சுவர்ண (தங்க) லாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் மேஷ ராசியில் நுழைவதால் தேசத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும், ஆஸ்திகம் வளர்ச்சியடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இந்த குருப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தனது ராசியில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதற்கு ஏற்ப, தனித்தனி பலன்கள் கிட்டும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    மேஷம் - பராகிரமம், செல்வம், குடும்பத்தினருக்கு சுகம், தன்னுடைய வாக்கு பலிதமாகுதல்.

    ரிஷபம்- தான் வசிக்கும் தேசத்தில் இருந்து வெளிச்செல்லுதல், சத்ருத்தன்மை.

    மிதுனம்- பொருள் காரணமாக அச்சம் ஏற்படலாம்.

    கடகம் - குழந்தை லாபம், பதவி, லாபம், கவுரவம்.

    சிம்மம் - பொருள், பதவி, துன்பம்.

    கன்னி- அனைத்து விதமான நன்மைகள் ஏற்படும்.

    துலாம் - தாய்க்கு (தாயால்) துன்பம், அரிஷ்டம், பொருள் நஷ்டம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    குரு 6-ம் இடத்தில் இருந்தால் தீராத வியாதிகள் ஏற்படலாம். இவைகளிலிருந்து விடுபட, தனுசு ராசிக்காரர்கள், மஞ்சள் நிறத்தாலான சுத்த பட்டுத்துணியை அல்லது புடவையை தெய்வ சன்னிதியில் வைத்து விட்டு, அதை எடுத்து வேதாத்யயனம் செய்தவருக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ. அவர்களின் மனைவிக்கோ, தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் வியாதிகள் விலகி ஆரோக்கியம் கிடைக்கும்.

    குரு 8-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய துலாம் ராசிக்காரர்கள் கமண்டலு என்னும் (வெள்ளி) ஜாரி அல்லது வெங்கல கிண்டியை வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    விருச்சிகம் - மங்கள நிகழ்ச்சிகளுக்கான யாத்திரை, பெண்ணால் சுகம், பிள்ளைப் பேறு.

    தனுசு - விரோதிகள் மந்தரிகள் தொல்லை, வியாதி

    மகரம் - குழந்தைச் செல்வம், குழந்தைகளால் நன்மை, நல்லோர் சேர்க்கை. அரசாங்கத்தில் அனுகூலம்.

    கும்பம் - உறவினர்களின் துன்பங்களால் ஏழ்மை, நாலுகால் பிராணிகளால் பயம், போன்ற பலன்கள் ஏற்படலாம்.

    மீனம் - இருப்பிட மாறுதல், இஷ்டத்தில் இருந்து பிரிவு, காரியத்தடை.

    குரு 10-ம் இடத்தில் இருப்பதால் ஏற்படும் இட மாறுதல் தோஷம் விலக சிம்ம ராசிக்காரர்கள் நர்மதா நதியில் எடுத்த பாண லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அதை தகுந்த நபரிடம் கொடுக்க வேண்டும்.

    பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மேஷம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் மேன்மையைத் தரும். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய மற்ற ராசிக்காரர்கள் குருப் பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும்.

    குருப் பெயர்ச்சி அன்றோ இன்று (வியாழக்கிழமை) புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நாள் அன்றோ காலையில் குளித்து விட்டு தானப் பொருட்களில் ஏதாவது ஒன்றை துளசி மற்றும் தட்சணையுடன் சேர்த்து கையில் வைத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டுக் கொண்டு தெய்வ சன்னிதியில் தரையில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு அந்த தானப் பொருளை தகுந்த நபரிடம் பணிவுடன் கொடுக்க வேண்டும். இதனால் குரு கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    Next Story
    ×