search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parikara Pooja"

    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    • பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
    • துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபட வேண்டும்.

    பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களுக்கு வளம்தரும் கற்பகமாகவும் ராகு காலமே திகழ்கிறது. எனவே பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.

    ராகுகாலம் 1 மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 -9.00, செவ்வாய் 3- 4.30, புதன் 12- 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12, சனி 9-10.30 ஆகும்.

    ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேஷ காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும்.

    இந்க நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

    சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை

    15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)

    மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை

    ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00- 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.

    துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

    கிரக சர்ப்ப சாந்தி

    பாம்பினை அடிப்பதால் வரும் தோசம், முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க வேண்டுமானால் செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும். வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.

    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

    2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.

    3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.

    4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    • பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
    • ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம்.

    ராகு தோஷம் என்பது பல வகைகளில் காணப்படும். ராகுபகவான் ரிஷபத்தில் உங்கள் ஜாதகத்தில் நீசம் பெற்று இருந்தாலும், பகை பெற்று இருந்தாலும், 7, 8-ல் இருந்தாலும், ராகு தோஷமாகும். புத்திர தோஷம், களத்திதிர தோஷம், காலசர்ப்ப யோகம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களுடன் கூடிய அமைப்புகளில் இருந்தாலும், ராகு தோஷம் தான்.

    ராகு திசை, ராகு புத்தி நடந்தாலும், ராகு காலத்தில் பிறந்திருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 4 வந்தாலும், அவை ராகு தோஷமாக கருதப்படும். சதயம், சுவாதி, திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், ராகு தோஷ பாதிப்பு ஏற்படக் கூடும்.

    இத்தகைய அமைப்பு- பெற்றவர்கள் பரிகார பூஜை செய்வது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, ராகு பகவானை, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.

    ராகு கிரகம், ஞானம், பாட்டனார் வம்சம், சேவகத் தொழில், கைத்தொழில், வித்தை, நீர்க்கண்டம், உடல் அங்ககீனம், வாயு, வலிப்பு நோய், பித்த நோய், இறைவாசம், கட்டிகள், வயிற்றுக் கோளாறு, விஷக்கடி போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது. அவர் கடுமையான களத்திர, புத்திர தோஷம் கொடுப்பத்துடன் சூரியன், செவ்வாய், சனியை விட மிகக் சொடியவர் ராகு.எனவே திருநாகேஸ்வர பரிகார வழிபாடு ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

    ராகுக்கிரக பரிகாரங்கள்

    ராகு பகவானுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிந்து, கோமேதம் அணிந்து, ராகு பகவானுக்கும் நீல நிறம் அல்லது கருப்புநிற ஆடை அணிவித்து, நீல மந்தார மலராலும், இலுப்பைக் பூவாலும் அலங்கரித்து, அருகு சமித்து கொண்டு தூபம் காட்டி, நெய் விளக்கு ஏற்றி, உளுத்தம் பருப்புப் பொடி சாதம் நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் அளித்திட வேண்டும்.

    ராகுபவானை ராகப் பிரியா ராகத்தில் ராகுபகவானின் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனையும் செய்து கொள்ளலாம். அருகம்புல் மாலை போட்டு, அருகம் புல்லால் விநாயகருக்குப் பூசை செய்யலாம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்ககைக்கு நெய் விளக்கு 11 வாரங்கள் போட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழி பட்டு வர வேண்டும்.

    ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம். உளுந்து, சுருட்டி, நீல நிறத் துணிகளையும் தானம் செய்யலாம். ராகுபகவானின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு இவைகளைப் பூசிக்க ராகு பகவான் மிகவும் மன மகிழ்ச்சி கொள்வார்.

    வழிபாடுக்கு ஏற்ற நாள், நேரம்

    திருநாகேஸ்வரம் ராகு பகவானை வழிபட, ராகு பகவான் உச்சம் பெறும் கார்த்திகை மாதத்தில் அவர் நட்சத்திரம் ஆகிய சதயம், சுவாதி, திருவாதிரை வரும் நாட்களில், வழிபாடு செய்வது நல்லது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுபவானுக்குப் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்வது மிக மிகச் சிறப்பாகும்.

    மற்றபடி தினசரி ராகு காலத்தில் பால் அபிஷேகம், பரிகார பூசை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பபுடையதாகும்.

    ×