search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahu-Ketu worship"

    • பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
    • துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபட வேண்டும்.

    பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களுக்கு வளம்தரும் கற்பகமாகவும் ராகு காலமே திகழ்கிறது. எனவே பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.

    ராகுகாலம் 1 மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 -9.00, செவ்வாய் 3- 4.30, புதன் 12- 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12, சனி 9-10.30 ஆகும்.

    ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேஷ காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும்.

    இந்க நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

    சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை

    15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)

    மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை

    ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00- 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.

    துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

    கிரக சர்ப்ப சாந்தி

    பாம்பினை அடிப்பதால் வரும் தோசம், முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க வேண்டுமானால் செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும். வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.

    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

    2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.

    3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.

    4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    • பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
    • ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம்.

    ராகு தோஷம் என்பது பல வகைகளில் காணப்படும். ராகுபகவான் ரிஷபத்தில் உங்கள் ஜாதகத்தில் நீசம் பெற்று இருந்தாலும், பகை பெற்று இருந்தாலும், 7, 8-ல் இருந்தாலும், ராகு தோஷமாகும். புத்திர தோஷம், களத்திதிர தோஷம், காலசர்ப்ப யோகம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களுடன் கூடிய அமைப்புகளில் இருந்தாலும், ராகு தோஷம் தான்.

    ராகு திசை, ராகு புத்தி நடந்தாலும், ராகு காலத்தில் பிறந்திருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 4 வந்தாலும், அவை ராகு தோஷமாக கருதப்படும். சதயம், சுவாதி, திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், ராகு தோஷ பாதிப்பு ஏற்படக் கூடும்.

    இத்தகைய அமைப்பு- பெற்றவர்கள் பரிகார பூஜை செய்வது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, ராகு பகவானை, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.

    ராகு கிரகம், ஞானம், பாட்டனார் வம்சம், சேவகத் தொழில், கைத்தொழில், வித்தை, நீர்க்கண்டம், உடல் அங்ககீனம், வாயு, வலிப்பு நோய், பித்த நோய், இறைவாசம், கட்டிகள், வயிற்றுக் கோளாறு, விஷக்கடி போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது. அவர் கடுமையான களத்திர, புத்திர தோஷம் கொடுப்பத்துடன் சூரியன், செவ்வாய், சனியை விட மிகக் சொடியவர் ராகு.எனவே திருநாகேஸ்வர பரிகார வழிபாடு ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

    ராகுக்கிரக பரிகாரங்கள்

    ராகு பகவானுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிந்து, கோமேதம் அணிந்து, ராகு பகவானுக்கும் நீல நிறம் அல்லது கருப்புநிற ஆடை அணிவித்து, நீல மந்தார மலராலும், இலுப்பைக் பூவாலும் அலங்கரித்து, அருகு சமித்து கொண்டு தூபம் காட்டி, நெய் விளக்கு ஏற்றி, உளுத்தம் பருப்புப் பொடி சாதம் நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் அளித்திட வேண்டும்.

    ராகுபவானை ராகப் பிரியா ராகத்தில் ராகுபகவானின் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனையும் செய்து கொள்ளலாம். அருகம்புல் மாலை போட்டு, அருகம் புல்லால் விநாயகருக்குப் பூசை செய்யலாம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்ககைக்கு நெய் விளக்கு 11 வாரங்கள் போட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழி பட்டு வர வேண்டும்.

    ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம். உளுந்து, சுருட்டி, நீல நிறத் துணிகளையும் தானம் செய்யலாம். ராகுபகவானின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு இவைகளைப் பூசிக்க ராகு பகவான் மிகவும் மன மகிழ்ச்சி கொள்வார்.

    வழிபாடுக்கு ஏற்ற நாள், நேரம்

    திருநாகேஸ்வரம் ராகு பகவானை வழிபட, ராகு பகவான் உச்சம் பெறும் கார்த்திகை மாதத்தில் அவர் நட்சத்திரம் ஆகிய சதயம், சுவாதி, திருவாதிரை வரும் நாட்களில், வழிபாடு செய்வது நல்லது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுபவானுக்குப் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்வது மிக மிகச் சிறப்பாகும்.

    மற்றபடி தினசரி ராகு காலத்தில் பால் அபிஷேகம், பரிகார பூசை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பபுடையதாகும்.

    • விரத நாளில் மஞ்சள் குங்குமம் வைத்து புற்றுக்கு பூஜை செய்ய வேண்டும்.
    • பாம்பு கோயிலில் 9 முறை வலம் வர வேண்டும்

    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.

    திருமணம் ஆகாத பெண்கள் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமண வாழ்க்கையில் பிரச்சினையைக் காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30 - 12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11 வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    திருமண வரம் கூடி வந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சனை தீர்ந்தவுடன் அரக்கு கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.

    நாகபஞ்சமி விரதம்:

    ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து ஒரு ஆண்டு இவ்விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    12-ம் மாதமான ஆனி மாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிக்க வேண்டும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைபேறும், குழந்தைப்பேறு உடையவர்களுக்கு குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி உண்டாகும். விரத நாளில் மஞ்சள் குங்குமம் வைத்து புற்றுக்கு பூஜை செய்ய வேண்டும்.

    பால், முட்டை ஆகியவற்றை நிவேதனமாக கொடுக்க வேண்டும். இந்நாளில் பாம்பு கோயிலில் 9 முறை வலம் வர வேண்டும்

    ராகு தரும் ஜாதகப் பலன்கள்

    குரு, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் என்றாவது ஒருநாள் சரித்திரம் படைக்கிறார்கள்.

    புத்திரஸ்தானத்தில் (ஐந்தில்) ராகு, கேது இருப்பது கடுமையான புத்திரதோஷம் ஆகும். பிள்ளைகள் இவர்களுக்குப் பிறக்காது. மீறிப் பிறந்தாலும் அந்தப் பிள்ளைகளை ஏன் பெற்றோம் என்று சொல்லும் அளவுக்கு இருப்பர்.

    கிரகணம் தோன்றும் நாளில் உடலுறவு கொள்வது கடுமையான தோஷத்தை உண்டாக்கும். மேலும் குழந்தை ஊனமுற்றதாகப் பிறக்கும்.

    ராகு, கேதுவால் புத்திரதோஷம் உண்டானால் சர்ப்பசாந்தி, நாகப்பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சென்று தோஷப் பரிகாரம் செய்தாலும் புத்திரதோஷம் நிவர்த்தி ஆகும்.

    5-ம் இடத்தை ராகு பார்த்தால் சுருச்சிதைவு உண்டாகும் அல்லது குறைப்பிரசவம் ஏற்படும். 7-ம் அதிபதி, ராகு (அ) கேது இவர்களுடன் கூடி 6, 8, 12-ல் நிற்க தன் குலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மாதரை மணப்பர்.

    சுக்கிரன் நீசம் பெற்று ராகு (அ) கேது இவர்களுடன் சேர்ந்தால் திருமணம் தாமதமாகும்.

    எல்லா கிரகங்களும் ராகு-கேதுக்குள் அமைந்திருக்கும் அமை¢பபு உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகிறது. இதனை காலசர்ப்ப தோஷம் என்கிறோம். பெண் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு இருக்க எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை.

    7ம் இடம் ராகுவால் பார்க்கப்பட்டால் மனைவி - கணவன் சொல் பேச்சு கேட்பவளாக இருக்க மாட்டாள்.

    மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகள் மலட்டு ராசிகள் இந்த இடங்களில் ராகு இருந்தால் எவ்வளவுதான் பரிகாரம் செய்தாலும் புத்திரபலன் உண்டாவது இல்லை.

    ஒருவர் ஜாதகத்தில் 5ல் ராகு இருந்து குரு பார்வை பெற்றால் புத்திரதோஷம் பரிகாரம் ஏற்படுகிறது. புத்ரபாக்கியம் உண்டாகிறது.

    ராகு பகவான் புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குரு சாரமாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர சாரங்களில் அமையப் பெற்றாலும் புத்திர தோஷத்திற்கு பரிகாரம் உண்டாகிறது.

    ராகுவும், சனியும் இணைந்து லக்கனத்தில் காணப்பட்டால் கணவன், மனைவிக்குள் பிரிவு உண்டாகலாம்.

    7-ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் காணப்பட்டால் கலப்புத் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டாகும்.

    10-ம் வீட்டில் ராகு அமைப்பும், 10-ம் அதிபதி சாரம் பெற்றாலும் கெமிக்கல், மருந்து, தெய்வீகத் தொழில போன்றவை அமையப் பெறும்.

    ராகு பகவான் கொடுப்பதில் வல்லவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரே மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடத்தில் வீற்றிருக்கும் போது யோகப் பலனை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்.

    ராகு ஒருவர் ஜாதகத்தில் உச்சம் பெற்றுக் காணப்பட்டால், அரசியல் வாழ்க்கை ஏற்படுகின்றது.

    ஒருவர் ஜாதகத்தில் 6-ம் வீட்டில் ராகு வீற்றிருக்கும் போது `அஷ்டலட்சுமி யோகம்' ஏற்படுகின்றது. இதனால் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.

    ராகு 7-ல் வீற்றிருந்து அசுபரால் பார்க்கப்படும் போது மணவாழ்வில் சிறிது கூட சந்தோஷம் இருப்பதில்லை.

    ராகு 7-ல் வீற்றிருந்து 12ம் வீட்டில் இரண்டு பாவிகள் அமையப் பெற்றிருந்தால் கணவன் - மனைவி உறவில் சிறிது கூட சந்தோஷம் உண்டாவதில்லை.

    ராகு 12-ம் வீட்டில் அமையப் பெற்று 2, 7 ஆகிய வீடுகலில் பாவிகள் அமையப் பெற்றால், அந்த ஜாதகருக்கு தார தோஷம் ஏற்படுகிறது.

    ராகு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்று 7ம் வீட்டில் அமையப் பெற்றால் அவன் மனைவி எப்பொழுதும் நோயாளியாகவே திகழ்வாள்.

    ராகு, சுக்கிரன் 7-ம் வீட்டில் அமையப் பெற்றாலோ அல்லது லக்னத்தில் காணப் பட்டாலோ அவனுடைய மணவாழ்வு சிறிது கூட சந்தோஷம் இருக்காது.

    சனியும், கேதுவும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்கள் வாழ்வில் பற்று இல்லாதவர்களாக வாழ்கின்றனர்.

    ராகு பகவான் செவ்வாய், சனி இவர்களுடன் சேர்க்கை பெற்று தசாபுத்தி நடைபெறும் போது திடீர் மரணம் உண்டாகும்.

    ராகுவோடு குருபகவான் சேர்ந்து காணப்பட்டால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் அமையப்பெற்று ராகு திசை நடைபெறும்போது பெரும் செல்வமும், செல்வாக்கும் உண்டாகும்.

    3, 6-ல் ராகும். இருக்க வெற்றிகளை அள்ளித்தருவார். ராகு கிரகம் எப்போதும் பின்நோக்கியே செல்லும். ராகுவுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது. இவர் அமர்ந்த வீடே இவருக்கு ஆட்சி வீடுகள் ஆகும்.

    தான் இருக்கும் வீட்டின் அதிபதியை பொருத்தும் இணைந்த பார்த்த கிரகங்களைப் பொருத்தும் ராகு தான் பெற்ற சாரநாதனைப் பொருத்தும் பலன் தருவார். பொதுவாக ராகு சனிபகவானின் குணத்தை உடையவர். ஒரு ராசியை கடக்க இவருக்கு 1 ஆண்டுகள் ஆகிறது.

    ×