search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமண வரம் தரும் ராகு வழிபாடு
    X

    திருமண வரம் தரும் ராகு வழிபாடு

    • விரத நாளில் மஞ்சள் குங்குமம் வைத்து புற்றுக்கு பூஜை செய்ய வேண்டும்.
    • பாம்பு கோயிலில் 9 முறை வலம் வர வேண்டும்

    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.

    திருமணம் ஆகாத பெண்கள் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமண வாழ்க்கையில் பிரச்சினையைக் காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30 - 12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11 வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    திருமண வரம் கூடி வந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சனை தீர்ந்தவுடன் அரக்கு கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.

    நாகபஞ்சமி விரதம்:

    ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து ஒரு ஆண்டு இவ்விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    12-ம் மாதமான ஆனி மாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிக்க வேண்டும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைபேறும், குழந்தைப்பேறு உடையவர்களுக்கு குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி உண்டாகும். விரத நாளில் மஞ்சள் குங்குமம் வைத்து புற்றுக்கு பூஜை செய்ய வேண்டும்.

    பால், முட்டை ஆகியவற்றை நிவேதனமாக கொடுக்க வேண்டும். இந்நாளில் பாம்பு கோயிலில் 9 முறை வலம் வர வேண்டும்

    ராகு தரும் ஜாதகப் பலன்கள்

    குரு, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் என்றாவது ஒருநாள் சரித்திரம் படைக்கிறார்கள்.

    புத்திரஸ்தானத்தில் (ஐந்தில்) ராகு, கேது இருப்பது கடுமையான புத்திரதோஷம் ஆகும். பிள்ளைகள் இவர்களுக்குப் பிறக்காது. மீறிப் பிறந்தாலும் அந்தப் பிள்ளைகளை ஏன் பெற்றோம் என்று சொல்லும் அளவுக்கு இருப்பர்.

    கிரகணம் தோன்றும் நாளில் உடலுறவு கொள்வது கடுமையான தோஷத்தை உண்டாக்கும். மேலும் குழந்தை ஊனமுற்றதாகப் பிறக்கும்.

    ராகு, கேதுவால் புத்திரதோஷம் உண்டானால் சர்ப்பசாந்தி, நாகப்பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சென்று தோஷப் பரிகாரம் செய்தாலும் புத்திரதோஷம் நிவர்த்தி ஆகும்.

    5-ம் இடத்தை ராகு பார்த்தால் சுருச்சிதைவு உண்டாகும் அல்லது குறைப்பிரசவம் ஏற்படும். 7-ம் அதிபதி, ராகு (அ) கேது இவர்களுடன் கூடி 6, 8, 12-ல் நிற்க தன் குலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மாதரை மணப்பர்.

    சுக்கிரன் நீசம் பெற்று ராகு (அ) கேது இவர்களுடன் சேர்ந்தால் திருமணம் தாமதமாகும்.

    எல்லா கிரகங்களும் ராகு-கேதுக்குள் அமைந்திருக்கும் அமை¢பபு உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகிறது. இதனை காலசர்ப்ப தோஷம் என்கிறோம். பெண் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு இருக்க எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை.

    7ம் இடம் ராகுவால் பார்க்கப்பட்டால் மனைவி - கணவன் சொல் பேச்சு கேட்பவளாக இருக்க மாட்டாள்.

    மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகள் மலட்டு ராசிகள் இந்த இடங்களில் ராகு இருந்தால் எவ்வளவுதான் பரிகாரம் செய்தாலும் புத்திரபலன் உண்டாவது இல்லை.

    ஒருவர் ஜாதகத்தில் 5ல் ராகு இருந்து குரு பார்வை பெற்றால் புத்திரதோஷம் பரிகாரம் ஏற்படுகிறது. புத்ரபாக்கியம் உண்டாகிறது.

    ராகு பகவான் புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குரு சாரமாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர சாரங்களில் அமையப் பெற்றாலும் புத்திர தோஷத்திற்கு பரிகாரம் உண்டாகிறது.

    ராகுவும், சனியும் இணைந்து லக்கனத்தில் காணப்பட்டால் கணவன், மனைவிக்குள் பிரிவு உண்டாகலாம்.

    7-ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் காணப்பட்டால் கலப்புத் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டாகும்.

    10-ம் வீட்டில் ராகு அமைப்பும், 10-ம் அதிபதி சாரம் பெற்றாலும் கெமிக்கல், மருந்து, தெய்வீகத் தொழில போன்றவை அமையப் பெறும்.

    ராகு பகவான் கொடுப்பதில் வல்லவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரே மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடத்தில் வீற்றிருக்கும் போது யோகப் பலனை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்.

    ராகு ஒருவர் ஜாதகத்தில் உச்சம் பெற்றுக் காணப்பட்டால், அரசியல் வாழ்க்கை ஏற்படுகின்றது.

    ஒருவர் ஜாதகத்தில் 6-ம் வீட்டில் ராகு வீற்றிருக்கும் போது `அஷ்டலட்சுமி யோகம்' ஏற்படுகின்றது. இதனால் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.

    ராகு 7-ல் வீற்றிருந்து அசுபரால் பார்க்கப்படும் போது மணவாழ்வில் சிறிது கூட சந்தோஷம் இருப்பதில்லை.

    ராகு 7-ல் வீற்றிருந்து 12ம் வீட்டில் இரண்டு பாவிகள் அமையப் பெற்றிருந்தால் கணவன் - மனைவி உறவில் சிறிது கூட சந்தோஷம் உண்டாவதில்லை.

    ராகு 12-ம் வீட்டில் அமையப் பெற்று 2, 7 ஆகிய வீடுகலில் பாவிகள் அமையப் பெற்றால், அந்த ஜாதகருக்கு தார தோஷம் ஏற்படுகிறது.

    ராகு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்று 7ம் வீட்டில் அமையப் பெற்றால் அவன் மனைவி எப்பொழுதும் நோயாளியாகவே திகழ்வாள்.

    ராகு, சுக்கிரன் 7-ம் வீட்டில் அமையப் பெற்றாலோ அல்லது லக்னத்தில் காணப் பட்டாலோ அவனுடைய மணவாழ்வு சிறிது கூட சந்தோஷம் இருக்காது.

    சனியும், கேதுவும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்கள் வாழ்வில் பற்று இல்லாதவர்களாக வாழ்கின்றனர்.

    ராகு பகவான் செவ்வாய், சனி இவர்களுடன் சேர்க்கை பெற்று தசாபுத்தி நடைபெறும் போது திடீர் மரணம் உண்டாகும்.

    ராகுவோடு குருபகவான் சேர்ந்து காணப்பட்டால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் அமையப்பெற்று ராகு திசை நடைபெறும்போது பெரும் செல்வமும், செல்வாக்கும் உண்டாகும்.

    3, 6-ல் ராகும். இருக்க வெற்றிகளை அள்ளித்தருவார். ராகு கிரகம் எப்போதும் பின்நோக்கியே செல்லும். ராகுவுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது. இவர் அமர்ந்த வீடே இவருக்கு ஆட்சி வீடுகள் ஆகும்.

    தான் இருக்கும் வீட்டின் அதிபதியை பொருத்தும் இணைந்த பார்த்த கிரகங்களைப் பொருத்தும் ராகு தான் பெற்ற சாரநாதனைப் பொருத்தும் பலன் தருவார். பொதுவாக ராகு சனிபகவானின் குணத்தை உடையவர். ஒரு ராசியை கடக்க இவருக்கு 1 ஆண்டுகள் ஆகிறது.

    Next Story
    ×