search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navakragam"

    • சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,
    • இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

    திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),

    பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,

    செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,

    முத்து பதித்த மோதிரம் அணிவது,

    வெங்கடாசலபதியை தரிசிப்பது,

    திருப்பதி சென்று வருவது,

    சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,

    ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது,

    இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது,

    வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது,

    வெள்ளை நிற ஆடை அணிவது,

    எப்போதும் வெள்ளை நிறக்குட்டை வைத்திருப்பது,

    அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

    சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும் பவுர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது மிக, மிக நல்லது.

    • சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும்.
    • இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும்.

    1. திங்களூர்,

    2. திருப்பதி.

    திங்களூர்:

    திங்கள் என்றால் சந்திரன்.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும்.

    இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது.

    இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    திருப்பதி:

    இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்ட ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம்.

    திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    • சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.
    • சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ் வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

    சந்திராதியோகம், சந்திர மங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபா யோகம்.

    சந்திராதியோகம்

    சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகி ரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

    சந்திர மங்கள யோகம்

    சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ் வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

    சகடயோகம்

    சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.

    அமாவாசை யோகம்

    சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடிய வராகவும் இருப்பார்கள்.

    மேத்ரும யோகம்

    சந்திரனுக்கு முன்னும் பின் னும் கிரகங்கள் இல்லாமல் இருப் பது. இதனால் வாழ்வில் முன் னேற்றமற்ற நிலை உண்டாகும்.

    அனபாயோகம்

    சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.

    சுனபா யோகம்

    சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.

    சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

    பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.

    நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    • சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார்.
    • சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம்.

    சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார்.

    ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது.

    சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந் திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம்.

    சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம்.

    சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம்.

    7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம்.

    இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது .

    சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்ற கிரகங்களின் சஞ்சார பலனை அறிய முடியும்.

    • சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.
    • சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.

    சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.

    சந்திரன் ஒருவருக்கு பலம் பெற்றிருந்தால் மற்றவர்களிடம் பாசமாக நடக்கும் பண்பு, நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பலம் இழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் கோட்சார ரீதியாக 1,3,6,7,10,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் ஜென்ம ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதை சந்திராஷ்டமம் என்கிறோம்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.

    சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டுதான் தினப்பலன் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

    • மக்களுக்கு நன்மைய ளிப்பதில் கருணை உள்ளம் கொண்ட சந்திரனை பூஜித்து அவர் பலத்தை பெற்று நன்மையடையலாம்.
    • இந்த நாள்களில் புதிய முயற்சி மேற்கொள்வதோ அல்லது புதியதாக ஏதேனும் வாங்குவதோ கூடாது.

    ஒவ்வொருவருக்கும் அவரவர் ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார முறையில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமனமாகும்.

    இந்த நாள்களில் புதிய முயற்சி மேற்கொள்வதோ அல்லது புதியதாக ஏதேனும் வாங்குவதோ கூடாது.

    வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த நாள்களில் இறைவன் நாமாவை உச்சரித்து கொண்டே அமைதியாக இருப்பது நல்லது.

    சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிகளில் ஆண்டுக்கணக்கில் மோசமான பலன் சொல்லப்பட்டிருந்தாலும், சந்திரன் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தபட்சம் பதின்மூன்று நாட்கள் அனுகூலமாயிருந்து நன்மையை தருவார்.

    இருபத்தி ஏழு நாள்களில் பன்னிரண்டு கட்டங்களையும் தாண்டி விடுகிறார்.

    மக்களுக்கு நன்மைய ளிப்பதில் கருணை உள்ளம் கொண்ட சந்திரனை பூஜித்து அவர் பலத்தை பெற்று நன்மையடையலாம்.

    • இப்பலம் பெற்றவருக்கு வாய்க்கும் மனைவியும் உயர்ந்த வேலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
    • சந்திரன் நின்ற தானத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திரமங்கள யோகம் ஏற்படும்

    சந்திர பலம் அதிகமாக உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பார்கள்.

    இவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

    இப்பலம் பெற்றவருக்கு வாய்க்கும் மனைவியும் உயர்ந்த வேலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்.

    ஒருவன் பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் ராசியே "ஜெனன ராசி" என்று ஜாதகத்தில் குறிப்பிடப்படுகிறது.

    கடகத்தை ஆட்சியாக கொண்ட சந்திரனை ராணி என்றும் தாய்க்கிரகம் என்றும் சொல்வார்கள்.

    சந்திர பலம் அதிகமாக உள்ளவர்கள் எழுத்தாளர்களாக, நடிகர்களாக, சொற்பொழிவாளர்களாகவும், கவிஞர்களாகவும், வியாபாரிகளாக இருப்பார்கள்.

    அழகு நிலையம் வைத்து நடத்துவார்கள்.

    அழகு பொருள், வாசனை பொருள் தயாரிப்பார்கள், துணிக்கடைகளுக்கு முதலாளியாக இருப்பார்கள்.

    ஜாதகத்தில் நாலாம் இடத்தில் சந்திரன் இருந்து அது கடகம், மீனமாக இருந்தால் அவர்கள் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வார்கள்.

    சுக்ர பலமின்றி சந்திர பலமட்டும் உள்ளவர்கள் கடலில் வேலை செய்வார்கள்.

    ஒருவருடைய ஜாதகத்தில் குருவுக்கு 1, 4, 7, 10 இல் சந்திரன் இருந்தால் அவருக்கு "கெஜகேசரி யோகம்" ஏற்பட்டு தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் ஏற்படும்.

    சந்திரன் நின்ற தானத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திரமங்கள யோகம் ஏற்படும்.

    இதனால் அவர்களுக்கு அரச போக வாழ்க்கை கிட்டும்.

    • ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் உச்சம்.
    • இரவு நேரம், தட்சிணாயணம் ஆகிய காலங்களில் பிறந்தவர்களும் சந்திர பலம் பெற்றவர்களாவர்கள்.

    முற்பிறவியில் ஒருவன் தன் தாயையும், காதலியையும், மனைவியையும் ஏமாற்றி மோசம் செய்து தவிக்க விட்டவனும்,

    இதைப்போல் ஒரு பெண் தன் காதலனையும், கணவனையும் ஏமாற்றி மோசம் செய்தவளும் அடுத்த பிறவியில்

    சந்திர பலமிழந்து பிறக்கின்றார்கள்.

    ஜாதகத்தில் 3, 6, 8, 12ல் சந்திரன் இருக்க பிறந்தவர்களுக்கும் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாயிருக்கும் போது பிறந்தவர்களுக்கும் சந்திரபலம் குறைவு.

    ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் உச்சம்.

    கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஆட்சி, உடன் இராகு, கேது, சனி இருந்தால் பலம் குறைவு.

    சந்திரன் சுப பார்வையின்றி சனி வீட்டில் இருந்தாலே, இராகு, கேதுவுடன் கூடியிருந்தாலோ, மறைவிடத்திலிருந்தாலோ அந்த ஜாதகர் சந்திர பலத்தை பெறலாம்.

    ஒவ்வொரு ராசியிலும் கடைசி பாதம் அதாவது மேஷ ராசியில் கிருத்திகை 1 ஆம் பாதம், கன்யா ராசியில் சித்திரை 2 ஆம் பாதம்,

    தனுசு ராசியில் உத்திராடம் 1 ஆம் பாதமாக இருந்து பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் ஜாதகத்தில்

    4 ஆம் இடத்தில் இருந்தால் சந்திர பலம் அதிகமாக இருக்கும்.

    1, 2, 5, 7, 9, 10, 11 ஆம் இடங்களில் பாவக் கிரகங்களோடு சேராமல் இருந்தாலும் சந்திர பலம் அதிகம்.

    2, 11, 20, 29 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் 21 முதல் மே 20 வரையிலும், ஜூன் 21 முதல் ஜூலை 20 வரையிலும்,

    சோமவாரம் என்னும் திங்கள் கிழமைகளிலும், வளர்பிறை, பவுர்ணமி, இரவு நேரம், தட்சிணாயணம் ஆகிய காலங்களில்

    பிறந்தவர்களும் சந்திர பலம் பெற்றவர்களாவர்கள்.

    • இதைப்போல் திருமண பொருத்தமும் சந்திரனை கொண்டே கணக்கிட்டு கூறலாம்.
    • சந்திரன் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிகளில் சமத்துவம் பெறுகிறது.

    ஜாதகத்தில் சந்திரனை மாத்ரு காரகன் என்றும், நவக்கிரகங்களிலே சுபக்கிரகன் என்னும் குறிப்பிடுவார்கள்.

    ஒருவருடைய ஜாதகத்தில் முற்பிறப்பில் பவுர்ணமி விரதமிருந்து, பூஜை செய்ததன் பலனாக சந்திரன் இருக்கும் இடத்தை வைத்தே அந்த ஜாதகர் தன் தாயை நன்றாக கவனித்துக் கொள்வார்.

    கடைசி வரையிலும் தாயை வைத்துக் காப்பாற்றுவார் என்று சொல்லிவிடலாம்.

    இதைப்போல் திருமண பொருத்தமும் சந்திரனை கொண்டே கணக்கிட்டு கூறலாம்.

    ஜாதகத்தில் சந்திர தசை பத்து வருடம் இருக்கும்.

    சந்திரன் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிகளில் சமத்துவம் பெறுகிறது.

    ரிஷப ராசியில் உச்சமும், கடகத்தில் ஆட்சியும், விருச்சிகத்தில் நீச்சமும் அடைகிறது.

    மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளுக்கு நட்பாகிறது.

    குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி போன்றவற்றுக்கும் சந்திரனை கொண்டே தான் பலன் சொல்லப்படுகிறது.

    சந்திரனுக்கு பகையே கிடையாது.

    வக்கிரமடையாத கிரகம் சந்திரன். இவனை கொண்டே முகூர்த்தங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

    • ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் "ஈசான்ய தீர்த்தம்" அமைந்துள்ளது.
    • வருண தீர்த்தத்தில் நீராடினால் ஒன்பது கிரகங்களும் நன்மையை கொடுக்கும்.

    மேற்கு திசையில் "வருண தீர்த்தம்" அமைந்துள்ளது.

    இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் ஒன்பது கிரகங்களும் நன்மையை கொடுக்கும்.

    இந்த தீர்த்தத்திற்கு வாயு திசையில் "வாயு தீர்த்தம்" உள்ளது.

    அதில் நீராடினால், எல்லா துன்பங்களும் தீரும்.

    வடக்கு திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது.

    இந்த தீர்த்தத்தில் நீராடினால், வறுமை எல்லாம் நீங்கி, சிவபெருமான் திருவடியை அடையலாம்.

    ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் "ஈசான்ய தீர்த்தம்" அமைந்துள்ளது.

    இந்த தீர்த்தத்தில் நீராடி, ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    • சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
    • அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.

    சந்திரன்

    வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.

    சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.

    இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.

    சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்

    ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.

    மூன்றாம் பிறை தரிசனம்

    மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

    மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

    பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.

    ×