search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.


     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.

    ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900

    புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900

    11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900

    13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 

    • 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
    • மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.

    2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.

    அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

    ஐபோன் 15

    ஐபோன் 15 ப்ரோ

    ஐபோன் 14

    கேலக்ஸி S24 அல்ட்ரா

    கேலக்ஸி A15 5ஜி

    கேலக்ஸி A54

    ஐபோன் 15 பிளஸ்

    கேலக்ஸி S24

    கேலக்ஸி A34





    • ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் அறிவிக்கப்படலாம்.
    • M4 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சி நாளை (மே 7) நடைபெற உள்ளது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகம் முழுக்க பார்வையாளர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடி நேரலையில் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதய ஐபேட் ப்ரோ மாடல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ப்ரோ ஆகும். இரு மாடல்களும் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஐபேட் சாதனங்களில் முதல்முறையாக இரு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஐபேட் மாடல்களில் M4 பிராசஸர் வழங்கப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், M3 பிராசஸர் கூட வழங்கப்படலாம்.

    இதைத் தொடர்ந்து இரண்டு ஐபேட் ஏர் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை 10.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவற்றுடன் ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் புது வசதிகளை வழங்கும் ஆப்பிள் பென்சில் மற்றும் மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய சாதனங்கள் வரிசையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
    • இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மோசடி மற்றும் தேவையற்ற விளம்பர தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 4(1) (d)-இன் கீழ் வாட்ஸ்அப் மோசடிகள் தொடர்பான புகார் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் வாட்ஸ்அப் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 69 மில்லியன் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது. 

    • ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது. 

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

     


    இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.

    ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    • வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
    • ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு இறுதியில் ரி என்ட்ரி கொடுத்தது. ரிஎன்ட்ரியின் போது ஹானர் பிராண்டின் முதல் சாதனமாக ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதுதவிர வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் மாறிவிடும்.

    பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வயலெட் ஹைடெக் 30 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 699 ஆகும். இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் X9b மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 3.1 மெமரி, 6.78 இன்ச் பன்ச் ஹோல் கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 2652x1200 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 108MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 35 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. 2.0 டைப் சி போர்ட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் SE மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் ஸ்மார்ட் லிவிங் 2024 நிகழ்வை அறிவித்துள்ள சியோமி, அதில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புது சாதனங்களில் ஒன்று டேப்லெட் மாடலாக இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சியோமி நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி பேட் SE மாடல் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் டேப்லெட் மட்டுமின்றி அதன் டிசைன், நிறங்கள் மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

     


    இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடல் கிரீன், கிரே மற்றும் லாவண்டர் என மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும். டிசைனை பொருத்தவரை இந்த மாடல் அதன் ஐரோப்பிய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் 11 இன்ச் FHD+ 1900x1200 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் என துவங்குகிறது.

    • இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து ஒன்பிளஸ் 11 விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதில் ரூ. 3 ஆயிரம் விலை குறைப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி கூப்பன் அடங்கும்.

    இதுதவிர விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அமேசானில் வாங்கும் போது எக்சேன்ஜ் சலுகை அல்லது இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் எடர்னல் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:

    6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே

    120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி LPDDR5X ரேம், 128 ஜிபி UFS 4.0 மெமரி

    16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
    • ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மே 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் டெக்னாலஜி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிக குறைந்த லாபம் கிடைப்பதாகவும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளரகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாக தெரிகிறது.

    இதனால் மே 1 ஆம் தேதி முதல் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதவிர இம்மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைகள் குறித்து தீர்வு காண இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ×