search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபேட்"

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது.
    • இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களுக்காக ஏராளமான காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்-களை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெற்றிருக்கும் புதிய காப்புரிமை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2-இன்-1 டிசைன் கொண்ட ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அமெரிக்க டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 53 காப்புரிமைகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது. இதனுடன் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் படி ஐபேட் மேல்புறம் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

     

    இதன் மூலம் பயனர்கள் ஐபேட்-ஐ எளிதில் கழற்ற முடியும். இதில் உள்ள ஷெல் பல்வேறு வழிகளில் ஸ்டான்ட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. காப்புரிமை விவரங்களின் படி இந்த ஐபேட் ஷெல் அசெம்ப்லி வைபை, ப்ளூடூத் மற்றும் அல்ட்ரா வைடுபேன்ட் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

    இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இதர ஐபேட் டிசைன் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய ஐபேட் டிசைன்களில், விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் ஜெஸ்ட்யூர் டிடெக்ஷன் சப்போர்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐபேட் டிசைன் பற்றிய காப்புரிமை விவரங்கள், ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. 

    • சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.
    • மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

    ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

    ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல்கள் உற்பத்தி சீனா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
    • ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    சாதனங்களை உற்பத்தி செய்ய சீனாவை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தியை பெருமளவு இந்தியாவுக்கு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன்களை போன்றே ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்து முடிக்க ஏராளமான தடைகளை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் மிக முக்கியமானது ஐபேட் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களை தயார்படுத்துவதும் ஆகும். அந்த வகையில், இதனை சாத்தியப்படுத்துவது பற்றி இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை.

    தனது சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றுவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இடையூறுகளை சரி செய்த பின் ஐபேட் உற்பத்தி இங்கு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 முதல் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வந்தது. பின் மெல்ல உற்பத்தி பணிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.

    சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

    புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.

    • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஐபேட் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த டேப்லெட் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய ஐபேட் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் மாடல் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    யுஎஸ்பி சி போர்ட் கொண்டிருக்கும் புது ஐபேட் மாடல் வைபை 6 கனெக்டிவிட்டி, 5ஜி செல்லுலார் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. ஐபேட் ஒஎஸ் 16 கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலுடன் ஆப்பிள் பென்சில் முதல் தலைமுறை மாடலுக்கான சப்ரோர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐபேட் (10th Gen) அம்சங்கள்

    10.9 இன்ச் 2360x1640 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே

    ஏ14 பயோனிக் பிராசஸர்

    64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

    ஐபேட் ஒஎஸ் 16

    12MP பிரைமரி கேமரா

    12MP செல்பி கேமரா

    டூயல் மைக்ரோபோன்

    5ஜி (ஆப்ஷன்), வைபை 6, ப்ளூடூத் 5.2

    டச் ஐடி

    28.6 வாட் லித்தியம் அயன் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஐபேட் மாடல் புளூ, பின்க், சில்வர் மற்றும் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஐபேட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 ஆகும்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த புது வசதியை வழங்க இருக்கிறது.
    • அடுத்த ஆண்டு இதற்கான வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனத்திற்கான டாக் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கொண்டு ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபேட் மாடலுக்கான டாக் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டேப்லெட்-ஐ ஸ்பீக்கர் ஹப் உடன் இணைக்க செய்யும் அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமேசான் நிறுவனம் தனது ஃபயர் டேப்லெட் மாடல்களில் இதே போன்ற அம்சத்தை ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்த சாதனம் பயனர்கள் டேப்லெட்-ஐ சார்ஜ் செய்ய டாக் செய்து அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த வழி செய்கிறது.

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் தனது பிக்சல் டேப்லெட்-க்கு டாக்-ஐ அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தது. இது காந்த வசதி கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் ஸ்பீக்கர் போன்று செயல்படும். டேப்லெட் டாக்-இன் மீது வைத்தால் அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்தலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வாய்ஸ் மூலம் இயக்க முடியும்.

    கடந்த ஆண்டு வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. இதில் பில்ட்-இன் கேமரா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சாதனம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த ஐபேட் மாடல் ரிடிசைன் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அக்டோபர் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் பத்தாவது தலைமுறை எண்ட்ரி லெவல் ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும். 10-ஆம் தலைமுறை ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் ஆப்பிள் ஏ14 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


    இந்த டேப்லெட் மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இது அளவில் 10.5 இன்ச், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பேக் பேனலில் கேமரா பம்ப், ஹோம் பட்டன் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது விற்பனை செய்யப்படும் 9-ம் தலைமுறை ஐபேட் மாடலில் 10.2 இன்ச் டிஸ்ப்ளே, ஏ13 பயோனிக் சிப், 12MP பிரைமரி கேமரா, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ×