என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "iPad Pro"
- புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
- இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."
"புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் ப்ரோ விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் ஐபோன் 15 சீரிஸ் நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் OLED ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாடல்கள் 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் மினி மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் கூறப்பட்டது.
பிரபல டிப்ஸ்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புது OLED ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும். புது மாடல்கள் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இவற்றில் OLED பேனல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து இருந்தது.
அந்த வகையில் புது ஐபேட் மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு விட்ட நிலையில், 2024 வரை இதற்கான மேம்பட்ட வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்க முடியாது. OLED பேனல்களுக்கு மாறும் முன் ஆப்பிள் வெளியிடும் சிறு அப்டேட் ஆக புது மாடல்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு 14.1 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என ராஸ் யங் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்றும் மாறாக 16 இன்ச் அளவில் புது ஐபேட் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
- புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது.
- புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபேட் ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதன் ஐபேட் ப்ரோ வரிசையை புதுப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஐபேட் ப்ரோ மாடல் வருகிற 2023-ம் ஆண்டு வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் M2 SoC ஆல் இயக்கப்படும் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஒரு மாடலை உருவாக்குவதாக வதந்தி பரவியது. அது இந்த ஐபேட் ப்ரோ மாடலாகத் தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய M2 SoC அதன் முந்தைய சிலிகான் அமைப்பான M1 ஐ விட 18 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது, மேலும் 10-கோர் செயலிகளுடன் ஒப்பிடும்போது 1.9 மடங்கு வேகமாகவும் (CPU) 2.3 மடங்கு வேகமாகவும் (GPU) உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்