search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேசுப் மஹிந்திரா 1947 ஆண்டு வாக்கில் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்தார்.
    • பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாக குழுவில் கேசுப் மஹிந்திரா பணியாற்றி இருக்கிறார்.

    இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா இன்று அதிகாலை காலமானார்.

    மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் மருத்துவம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் களமிறங்க முக்கிய காரணமாக விளங்கினார்.

    இதுதவிர வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடட் டெக்னாலஜிஸ், பிரிடிஷ் டெலிகாம் உள்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

     

    அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேசுப் மஹிந்திரா 1947 ஆண்டு வாக்கில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்தார். 1963 வாக்கில் இவர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2012 ஆம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக குழு இயக்குனர்களில் ஒருவராக கேசுப் மஹிந்திரா தொடர்ந்தார்.

    ஸ்டீல் நிறுவனமாக துவங்கி இன்று உலகளவில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் வியாபார குழுமமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன மதிப்பு 15.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கேசுப் மஹிந்திரா அன்று துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்த் மஹிந்திராவிடம் ஒப்படைத்தார்.

    பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாக குழுவில் பணியாற்றி இருக்கும் கேசுப் மஹிந்திரா ஹட்கோ நிறுவனர் ஆவார். மேலும் செயில், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஒட்டல்ஸ், ஐஎப்சி. ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி என பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் குழுக்களில் இடம்பெற்று இருக்கிறார்.

    கேசுப் மஹிந்திராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் வினோத் அகர்வால், இந்திய ஆட்டோமொபைல் துறை முன்னோடிகளில் ஒருவரை இழந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்துள்ளது.
    • நெக்சான் மாடல் அறிமுகமான ஏழே மாதங்களில் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தியது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து நெக்சான் மாடலின் 5 லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டது. பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து டாடா நெக்சான் 5 லட்சமாவது யூனிட் வெளியானது. 2014 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் மாடல் 2017 வாக்கில் விற்பனைக்கு வந்தது.

    விற்பனைக்கு வந்ததில் இருந்தே நெக்சான் மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 35 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    அம்சங்களை பொருத்தவரை டாடா நெக்சான் மாடலில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏர் பியூரிஃபையர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா நெக்சான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸமிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனாக ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் மாடலில் தற்போது பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV400, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய புதிய ஆலையை கட்டமைக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டில் புதிதாக உற்பத்தி மையம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வாகன உற்பத்தி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரால் என்பீல்டு நிறுவனம் சென்னையை அடுத்த செய்யாறு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

    அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ. 1000 முதல் ரூ. 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி திறனுக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்த ஆலையில் ஐசி என்ஜின் உற்பத்தி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

     

    வாகனங்கள் அறிமுகத்தை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் இண்டர்செப்டார் / காண்டினென்டல் ஜிடி 650 மாடல்களின் அலாய் வீல் வெர்ஷனை மாடலை அறிமுகம் செய்தது.

    இந்த வரிசையில், ஷாட்கன் 650 மற்றும் ஹிமாலயன் 450 மாடல்கள் விரைவில் இணையும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் யூனிட் வல்லம் வடகால் ஆலையில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. செய்யாறில் உருவாகும் ஆலையை பயன்படுத்தி பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு படிப்படியாக மாற ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 பேட்டரியால் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ நேரலை நிகழ்வில் நேற்று உரையாற்றியுள்ளார். இதே நிகழ்வில் பேசிய துணை தலைவர் ஹிரோகி நகஜிமா, டொயோட்டா நிறுவனம் 2026 ஆண்டிற்குக்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யும் என தெரிகிறது. பல்வேறு பகுதிகளில் டொயோட்டா நிறுவனம், சாத்தியக்கூறுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கொஜி சடோ தெரிவித்தார். உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டொயோட்டா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

     

    டொயோட்டா நிறுவனம் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக விசேஷ பிரிவு ஒன்றை உருவாக்க இருக்கிறது. இதற்கான உற்பத்தி முதல் வியாபார பொறுப்பு வரை அனைத்திற்குமான தலைமை பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட இருக்கிறது. தலைமை பொறுப்புக்கான நபர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இவர் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது சந்தையில் 0.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 10 லட்சத்து 27 ஆயிரம் யூனிட்களையும், பிஒய்டி நிறுவனம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 யூனிட்களையும் விற்பனை செய்து இருந்தது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    • புதிய E கிளாஸ் மாடலின் டிசைன், அம்சங்கள் S கிளாஸ் மாடலை தழுவி வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் ஏப்ரல் 25 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதிலேயே தலைசிறந்த, தனிப்பட்ட E கிளாஸ் மாடலாக இது இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. W214 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் புதிய E கிளாஸ் மாடல், இந்த சீரிசில் ஆறாவது தலைமுறை மாடல் ஆகும்.

    இந்தியா மற்றும் சீனாவில் இந்த கார் லாங்-வீல்பேஸ் வடிவில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்டாண்டர்டு E கிளாஸ் மாடலுடனேயே அதன் லாங்-வீல்பேஸ் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய E கிளாஸ் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் E கிளாஸ் மாடலை விட சற்று பெரியதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

     

    புதிய E கிளாஸ் மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் S கிளாஸ் மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆடம்பர செடான் மாடலின் உள்புறம் MBUX சூப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று ஸ்கிரீன்கள் டேஷ்போர்டில் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கும். இது விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது.

    பவர்டிரெயினை பொருத்தவரை புதிய E கிளாஸ் மாடல் அதிகபட்சம் 4 அல்லது 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் 4 சிலிண்டர் டீசல் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், 6 சிலிண்டர் யூனிட்களுடன் பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் (PHEV) வழங்கப்பட இருக்கிறது. புதிய E கிளாஸ் PHEV மாடல் EV மோடில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • உள்நாடு மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதியும் முதல் முறையாக 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 895 யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. முன்னதாக 2018-19 வாக்கில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 492 யூனிட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு தனது முந்தைய விற்பனையை முறியடித்து இருக்கிறது.

    2022 ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6 லட்சத்து 02 ஆயிரத்து 268 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறந்த விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     

    2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 840 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 41 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதியை பொருத்தவரை 2022 நிதியாண்டில் 81 ஆயிரத்து 032 யூனிட்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 55 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

    "இந்த ஆண்டு ராயல் என்பீல்டு விற்பனை வளர்ச்சியில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. இந்த முறை விற்பனையில் புதிய எல்லையை கடந்து இருக்கிறோம். முதல் முறையாக எங்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீடியோர் 650 போன்ற மாடல்கள் எங்களின் எதிர்பார்ப்புகளை கடந்து, புதிய வாடிக்கையாளர்களை பெற்று தந்துள்ளது," என்று ராயல் என்பீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி பி. கோவிந்தராஜன் தெரிவித்தார்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை உயர்த்தியது.
    • விலை உயர்வு பற்றிய தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்து இருந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் கார்களில் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களின் விலையை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. கார் மாடல்கள் விலை உர்த்தப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதமே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஃபிளாக்ஷிப் செடான் மாடலான மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் விலை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து GLE கூப் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்றே S கிளாஸ் மாடல்களின் விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

     

    மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. C கிளாஸ் மற்றும் GLE எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 3 லட்சம் வரை உயர்ந்து இருக்கிறது. GLA மற்றும் A கிளாஸ் மாடல்களை வாங்குவோர் பழைய விலையை விட கூடுதலாக ரூ. 2 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.

    இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் செடான் விலை முன்பை விட ரூ. 4 லட்சம் அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் GLA 35 AMG விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • யமஹா மோட்டார் நிறுவனத்தின் மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
    • வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் ஐந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் தனது ஃபசினோ 125 Fi ஹைப்ரிட், ரே இசட்ஆர் 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் மூலம் வழங்கப்படும் அதிக மைலேஜ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்

    வாடிக்கையாளர்களிடையே அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச்' பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. இதில் மொத்தம் 42 யமஹா வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

    கோயம்புத்தூரில் மெகா மைலேஜ் சேலஞ்ச் செயல்பாடு, பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட விளக்க அமர்வுடன் தொடங்கியது. இதில், போட்டியாளர்களுக்கு திறமையான சவாரி நடத்தை மற்றும் சவாரிக்கு திட்டமிடப்பட்ட பாதை குறித்து நிபுணர்களால் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்கள் 30 கிலோமீட்டர் நீளமான பயணத்தை மேற்கொள்வதற்கு முன் அவர்களின் ஸ்கூட்டர்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

     

    30 கிலோமீட்டர் பாதையில் நகர போக்குவரத்து, அலைகள் மற்றும் திறந்த சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓட்டுநர் நிலைமைகளை உள்ளடக்கியது. பங்கேற்பாளர்கள் ஸ்கூட்டரின் இடைநீக்கத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. சவாரி முடிந்து அவர்கள் இடத்திற்குத் திரும்பியதும், ஸ்கூட்டர்கள் முந்தைய எரிபொருள் அளவைப் பொருத்து நிரப்பப்பட்டன. மேலும் சவாரியின் போது வழங்கப்பட்ட மைலேஜைக் கணக்கிட பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு பதிவு செய்யப்பட்டது.

    யமஹாவின் நன்றியுணர்வின் அடையாளமாக, இந்த மெகா மைலேஜ் சவால் நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களை 10-புள்ளி ஆய்வுக்கு உட்படுத்தி, இலவச வாட்டர் வாஷ் செய்யப்பட்டது. இதோடு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மெகா மைலேஜ் சவாலில் பங்கேற்ற 42 வாடிக்கையாளர்களிடம் இருந்து, செயல்பாட்டின் போது அதிக மைலேஜ் பெற்ற முதல் 5 வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு அட்டைகள் வழங்கப்பட்டன.

    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 707 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
    • புதிய ஃபிஸ்கர் எலெக்ட்ரிக் கார் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கலிஃபோர்னியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான ஃபிஸ்கர் தனது ஓசன் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 707 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என WLTP பரிசோதனையில் நிரூபித்து இருக்கிறது. இதுவரை இந்த பரிசோதனையில் கலந்து கொண்ட எந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலும் இத்தகைய ரேஞ்ச் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு வர இருக்கும் ஃபிஸ்கர் ஓசன் எலெக்ட்ரிக் எஸ்யுவி, சந்தையில் போட்டி நிறுவன மாடல்களான டெஸ்லா மாடல் X (565 கிமீ ரேஞ்ச்) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS எஸ்யுவி (587கிமீ ரேஞ்ச்) உடன் ஒப்பிடும் போது அதிக ரேஞ்ச் வழங்குகிறது.

     

    ஃபிஸ்கர் ஓசன் மாடலின் ஸ்போர்ட் வேரியண்ட் முன்புற ஆக்சிலில் 271 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இதன் அல்ட்ரா வேரியண்டில் 533ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது 3.9 நொடிகளில் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும்.

    புதிய ஃபிஸ்கர் ஓசன் எக்ஸ்டிரீம் வேரியண்டில் 542 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். ஸ்போர்ட் மாடலில் 443 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் 17.1 இன்ச் டச் ஸ்கிரீன், பெரிய ஸ்கை ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள் உள்ளன.

     

    ஃபிஸ்கர் ஓசன் அல்ட்ரா வேரியண்டில் ஹைப்பர் ரேஞ்ச் பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 628 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதிலும் ஸ்கை ரூஃப், ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேகிங், ரிமோட் வெஹிகில் ஃபைண்டர், டாகில் விண்டோஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எக்ஸ்டிரீம் வேரியண்டில் ஸ்மார்ட் டிராக்ஷன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜிங், லேன் சேஞ்சிங் அசிஸ்டண்ஸ், சுழலும் வகையிலான இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன. ஃபிஸ்கர் ஓசன் மாடலின் பேட்டரி அம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    • இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோகோரோ நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது.
    • 2030 வாக்கில் டெலிவரி பணிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் பயன்படுத்த ஜொமாட்டோ திட்டம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த, ஜொமாட்டோ நிறுவனம் கோகோரோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியின் கீழ் கோகோரோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜொமாட்டோவுக்கு வழங்கும்.

    ஜொமேட்டோ நிறுவனம் 2023 இறுதிக்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. டெலிவரி ஏஜண்ட்களுக்கு உதவும் வதையில் கோடக் மஹிந்திரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் உதவி வழங்க இருக்கிறது.

    "எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் டெலிவரி ஊழியர்களுக்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கும்," என ஜொமாட்டோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகித் சர்தானா தெரிவித்தார். 

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது.
    • இந்தியாவில் இருந்து அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 25 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் 1986 முதல் 87 முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியது. முதற்கட்டமாக வங்கதேசம் மற்றும் நேபால் நாடுகளுக்கு மாருதி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    அதன்படி 1987 வாக்கில் ஹங்கேரி நாட்டுக்கு 500 கார்களை முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் உள்பட உலகின் சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் கிரண்ட் விட்டாரா மாடலை லத்தீன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது.

    புதிய மைல்கல் எட்டியது பற்றி மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹிசாஷி டக்யுச்சி கூறியதாவது..

    "ஏற்றுமதியில் 25 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் இந்திய உற்பத்தி திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. மத்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டம் மற்றும் வாகன ஏற்றுமதி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க மாருதி சுசுகி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறது. எங்களின் தாய் நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தொடர் ஆதரவு இன்றி இது சாத்தியமாகி இருக்காது."

    "தலைசிறந்த தொழில்நுட்ப உதவி வழங்கியதோடு, சர்வதேச நெட்வொர்க் மூலம் இந்த மைல்கல்லை நாங்கள் அடைய சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் உதவியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு எங்களது குழுக்களின் அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பும் மிக முக்கிய காரணம் ஆகும். எங்களின் சர்வதேச வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச வினியோகஸ்தர்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களது நன்றிகள்."

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

     

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×