search icon
என் மலர்tooltip icon
    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
    • ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    • ஏற்றுமதி மட்டும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.
    • அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது.

    திருப்பூர் : 

    கடந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம், 35 லட்சத்து 91 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. இறக்குமதி வர்த்தகம் 57.35 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மட்டும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டின் துவக்கமே போராட்டமாக இருந்தது. ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது.சில மாதங்களில், பஞ்சு - நூல்விலை சீரான நிலையை அடைந்தது. அதற்கு பிறகும் ஏற்றுமதி வர்த்தகம் வேக மெடுக்கவில்லை.போர் சூழலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் செலவுகளை குறைத்து கொண்டனர். ஆடை விற்பனையும் முடங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து இரண்டு கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்திருந்தது. நடப்பு ஆண்டில் 9,930 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் குறைவு.ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,859 கோடி,2019-20ல் 9,786 கோடி, 2020-21 ஏப்ரல் மாதம் 962 கோடி, 2021-22ல், 9,664 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இந்தாண்டில் மீண்டும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஆர்டர் வரத்தும், அந்நாடுகளில் ஆடை விற்பனையும் குறைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.இந்தநிலையில் பருத்தி மிகை நாடாக திகழ்ந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக இந்த ஆண்டு மாறியுள்ளது. மொத்த உற்பத்தி 320 லட்சம் பேல்களாக குறைந்துள்ளதாகவும், மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். ஆண்டுதோறும் 350 லட்சம் பேல்களுக்கும்(ஒரு பேல் 170 கிலோ பஞ்சு) அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.இவ்வாண்டு பருத்தி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் செப்டம்பர் தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தையில் 90 சதவீத பருத்தி விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் 60 சதவீத பஞ்சு மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.தவிர மொத்த பருத்தி உற்பத்தி 337 லட்சம் பேல்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 320 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும். 20 லட்சம் பேல்கள் தரம் குறைவு காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பருத்தி மிகை நாடாக இதுவரை திகழ்ந்து வந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக மாறியுள்ளளது.கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி 44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த ஏற்றுமதி 18 சதவீதம் குறைந்துள்ளது. ஜவுளித்தொழில்துறையில் நிலவும் நெருக்கடியால் மொத்த உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. 25 முதல் 30 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விலை ரூ.60,700 ஆக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு ஒரு கேண்டி ரூ. 51,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கிறது. இதை நீக்கினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி இந்திய சந்தைக்கு வந்துவிடும். தவிர வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு பஞ்சு குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும்.

    கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மத்திய அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது. அதே போல் தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்போது உள்ள சூழல் குறித்து 'சைமா', 'சிட்டி' உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சரை விரைவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா்
    • தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது

    திருப்பூர் : 

    உயிரிழந்த பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்க ளுக்கு முதல்வா் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட ஒருங்கி ணைப்பாளா் கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் கடந்த மே 10 -ந் தேதி முதல் மே 12 ந் தேதி வரையில் 3 நாள்களில் 4 பகுதிநேர ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா். இதில், கரூரைச் சோ்ந்த பிரதாப் என்ற பகுதி நேர கணினி ஆசிரியா் சாலையோரத்தில் நின்று டீ அருந்திக் கொண்டி ருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக மாதம் ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பகுதிநேர ஆசிரியா்கள் இறந்தால் தற்காலிக ஊழியா்கள் என்பதால் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் எந்தவிதமான நிதியுதவியும் வழங்கு வதில்லை. இந்த நிலையில் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்ப ங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே, அரசு துறையில் பணியாற்றி மாணவா்களின் தனித் திறமையை உயா்த்திய உயிரிழந்த பல பகுதிநேர ஆசிரியா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். சொந்த ஊரை விட்டு இங்கு வந்து ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். போனஸ் பணத்தை வாங்கி, பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக வழங்கப்படாதது, பஞ்சு, நூல் விலை உயர்வால் உற்பத்தி முடங்கியது போன்ற காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வும் விசைத்தறி உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் செய்த விசைத்தறியாளர்கள், மின் கட்டணத்தை அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுவரை விசைத்தறிகள் முழுமையாக இயங்கவில்லை.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு போனஸ் கிடைக்குமா என்ற இக்கட்டான சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும், தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விசைத்தறி உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மார்க்கெட் நிலைமை சீரான உடன் விசைத்தறிகளை முழு வீச்சில் இயக்க விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. வரும் வாரத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போனஸ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

    ×