search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerloom workers"

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
    • விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.

    இதில் உற்பத்தியாளா்கள் சாா்பில் முத்துசாமி, செந்தில், சம்பத்குமாா், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    ஆனால் விசைத்தறியாளர்கள் குறைக்கப்பட்ட விசைத்தறி மின் கட்டணத்தை 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும்,மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் சட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளோம். குறைக்கப்பட்ட மின் கட்டணம் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்றார்.

    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து விசைத்தறி கூடங்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் விசைத்தறியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் சென்னையில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பூபதி, தெக்கலூர் பொன்னுச்சாமி, கதிர்வேல் மற்றும் மருத்துவர் கோகுல், அவிநாசி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    • விசைத்தறி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் தொழி லாளர் நல அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத்தறி கூடங்க ளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 14 சதவீதமும், வீட்டில் விசை த்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

    இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே இன்றுமுதல் வழக்கம்போல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    • தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். சொந்த ஊரை விட்டு இங்கு வந்து ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். போனஸ் பணத்தை வாங்கி, பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக வழங்கப்படாதது, பஞ்சு, நூல் விலை உயர்வால் உற்பத்தி முடங்கியது போன்ற காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வும் விசைத்தறி உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் செய்த விசைத்தறியாளர்கள், மின் கட்டணத்தை அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுவரை விசைத்தறிகள் முழுமையாக இயங்கவில்லை.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு போனஸ் கிடைக்குமா என்ற இக்கட்டான சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும், தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விசைத்தறி உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மார்க்கெட் நிலைமை சீரான உடன் விசைத்தறிகளை முழு வீச்சில் இயக்க விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. வரும் வாரத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போனஸ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

    ×