search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண குறைப்பு விரைவில் அமல் - அமைச்சர் தெரிவித்ததாக விசைத்தறியாளர்கள் தகவல்
    X

    அமைச்சரிடம் மனு அளித்த விசைத்தறி சங்க நிர்வாகிகள்.

    மின் கட்டண குறைப்பு விரைவில் அமல் - அமைச்சர் தெரிவித்ததாக விசைத்தறியாளர்கள் தகவல்

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    ஆனால் விசைத்தறியாளர்கள் குறைக்கப்பட்ட விசைத்தறி மின் கட்டணத்தை 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும்,மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் சட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளோம். குறைக்கப்பட்ட மின் கட்டணம் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்றார்.

    Next Story
    ×