search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் 18 நாட்களாக நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டியில் 18 நாட்களாக நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

    • விசைத்தறி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் தொழி லாளர் நல அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத்தறி கூடங்க ளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 14 சதவீதமும், வீட்டில் விசை த்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

    இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே இன்றுமுதல் வழக்கம்போல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    Next Story
    ×