search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு வார்த்தை"

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • இயற்கையாகவே உதவி மனப்பான்மை உடையவர் விஜயகாந்த்.
    • விமர்சிப்பவர்களிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி பழகி வந்தார்.

    திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள், தங்கள் வருவாயில் சமூக பணிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் பொதுத்தொண்டு செய்யும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தால் 70களில் சென்னைக்கு படையெடுத்தவர்களில் நடிகர் விஜயகாந்த்தும் ஒருவர்.

    நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த விஜயகாந்த் இயற்கையாகவே பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டிருந்தார்.



    தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து விஜயகாந்த், திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ராவுத்தர் பிலிம்ஸ்" அலுவலகம் தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதியில் ராஜாபாதர் தெருவில் செயல்பட்டு வந்தது. அங்கு வருபவர்களுக்கு விஜயகாந்த் இருந்தாலும், இல்லாத நேரத்திலும் எந்நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பசியுடன் வரும் பலருக்கும் அங்கு உணவு வழங்குவது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியுடன் இருந்தார்.

    இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல போராட்டங்களையும் நடத்தி அதில் ஈடுபட்டவர்களின் நலனையும் பாதுகாத்தவர் விஜயகாந்த். திரைப்பட படப்படிப்பு தளங்களில் துணை நடிக நடிகையர்களுக்கு பாதுகாப்பு, உணவு, உடை, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை நேரத்தில் கிடைக்க விஜயகாந்த் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.



    நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், அச்சங்கத்தின் கடனை அடைக்க வெளிநாடுகளில் நட்சத்திர விழாவை நடத்தி அதில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் பங்கேற்க வைத்து அதன் மூலம் சங்கத்தின் கடனையும் அடைத்து உபரியாக பெரும் தொகையை வங்கி கணக்கில் வைக்க வழிவகை செய்தார்.

    சங்கத்தில் நடிகர்-தயாரிப்பாளர், இயக்குனர்-நடிகர் என ஏற்படும் பல பிரச்சனைகளை சுமூக வழியில் தீர்த்து வைத்தாலும், அது குறித்து விளம்பரம் தேடி கொள்ளாதவர். விஜயகாந்த், புதிதாக திரைத்துறைக்கு வர துடிக்கும் பலரை நடிப்பு, இயக்கம், இசை என பல்வேறு துறைகளில் வாய்ப்பு அளித்து ஊக்கமளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.



    சரத்குமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி பல பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இயக்குனர்களுக்கும் சிபாரிசும் செய்தார். இந்த தகவல்கள் குறித்து அவர்கள் பிற்காலத்தில் தெரிவித்ததால்தான் மக்களுக்கு தெரிய வந்ததே தவிர விஜயகாந்த் எங்கும் இதை கூறி புகழ் தேடி கொள்ள விரும்பவில்லை.

    திரைத்துறையில் அவரை விமர்சித்தவர்களுடன் எந்தவித பாகுபாடும் இன்றி விஜயகாந்த பழகி வந்தார்.

    அவரது தொடக்க திரைப்பயண போராட்ட காலத்தில் அவருடன் நடிக்க மறுத்த பல நடிகைகள் பின்னர் அவர் வெற்றிகரமான முன்னணி கதாநாயகனாக உருவெடுத்ததும் அவருடன் நடிக்க சம்மதித்தனர். ஆனால், விஜயகாந்த் அவர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பழகி வந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையாகாது.

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது.
    • போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    கடலூர்:

    என்.எல்.சியை கண்டித்து 7 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே உள்ள கத்தாழை, மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்கு மறு குடியமர்வு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரியும், மத்திய அரசு அறிவித்ததை மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் வழங்க மறுப்பது ஏன் என கூறி 7 கிராம மக்கள் வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பா ட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ெபாதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர்.
    • பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர். இருந்த போதும், சேமக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சேமக்கோட்டையில் விரைவில் பயணியர் நிழற்குடை கட்டித் தரபடுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • முடிவு எடுப்பதற்காக 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா  திரவுபதி அம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள்புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர்லட்சுமணன்(விழுப்புரம்) சிவக்குமார்(மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்து க்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்திட அனைவருக்கும் உரிமை உண்டு, அதேப்போல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.

    பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக 3நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்.ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் க ட்டா ரவி தேஜா, விழுப்பு ரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்ச ந்திரன், கூடுத ல்போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நே ர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் தாசில்தார்வேல்முருகன், மேல்பாதி கிராமபொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடிந்து 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்காணம் அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் தலைமை தாங்கினார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள். மேலும், அங்கு வந்த மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் நாம் தமிழர் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

    • வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் அடுத்த சின்ன பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பூக் கடை நடத்தி வருகிறார்.

    இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 25) இவரும், ஏழரைப்பட்டி பகு தியைச் சேர்ந்த திவ்யா (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீர்த்தி வாசனும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னிமலை:-

    சென்னிமலை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து மழைக் காலங்களில் வெளியேறும் மழைநீர் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக அறச்சலூர் ரோட்டை சென்றடையும்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் அய்யப்பா நகருக்கு செல்லும் மழை நீரை பாதி யாக தடுக்கும் வகையில் சென்னிமலை பேரூ ராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் 11-வது வார்டுக்கு உட்பட்ட சோழன் வீதி வழியாக மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டு இதற்காக பஸ் நிலையம் அருகே தார் ரோட்டின் குறுக்கே பால மும் கட்டி முடிக்கப்பட்டது.

    ஆனால் இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் மழை நீரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இதனால் கால்வாய் அமைக்கும் பணி பாதி யிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் சுமூக தீர்வு காண்பதற்கு சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கி னார். சென்னிமலை பேரூ ராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் 6-வது மற்றும் 11-வது வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    அந்த பகுதிகளை சேர்ந்த இரு தரப்பு மக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பு மக்களின் கோரிக்கைகள் குறித்து ஈரோடு கலெக்டரி டன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • க்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை சேமூர் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான தனியார் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுகாதார கேடு நிலவுவதாகவும் பல்வேறுமுறை புகார் அளி த்தும் போதிய தடுப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஈக்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கோழிப்பண்ணை உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை பூந்துறை சேமூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    இதில் அதிகாரிகள் தரப்பில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், துணை தாசில்தார் கற்பகம், காவல் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் சுகாதா ரத்துறை சார்பில் மருத்துவர் சக்திவேல் மொடக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விஜயகுமார் நில வருவாய் ஆய்வாளர் பிரதீப் கிராம நிர்வாக அலுவலர் பூரண சுந்தரி உள்ளிட்டோர் அடங்கிய குழு மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மற்றும் பூந்துறை சேமுர் ஊராட்சி பொதுமக்கள் இந்த சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    பேச்சு வார்த்தையின் முடிவில் அதிகாரிகள் தரப்பில் 7 பேரும் பொது மக்கள் சார்பில் 11 பேரும் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ப ண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×