search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "talk to the public"

    • க்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை சேமூர் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான தனியார் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுகாதார கேடு நிலவுவதாகவும் பல்வேறுமுறை புகார் அளி த்தும் போதிய தடுப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஈக்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கோழிப்பண்ணை உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை பூந்துறை சேமூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    இதில் அதிகாரிகள் தரப்பில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், துணை தாசில்தார் கற்பகம், காவல் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் சுகாதா ரத்துறை சார்பில் மருத்துவர் சக்திவேல் மொடக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விஜயகுமார் நில வருவாய் ஆய்வாளர் பிரதீப் கிராம நிர்வாக அலுவலர் பூரண சுந்தரி உள்ளிட்டோர் அடங்கிய குழு மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மற்றும் பூந்துறை சேமுர் ஊராட்சி பொதுமக்கள் இந்த சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    பேச்சு வார்த்தையின் முடிவில் அதிகாரிகள் தரப்பில் 7 பேரும் பொது மக்கள் சார்பில் 11 பேரும் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ப ண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×