search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி

    மரக்காணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடிந்து 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்காணம் அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் தலைமை தாங்கினார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துமாறு கூறினார்கள். மேலும், அங்கு வந்த மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் நாம் தமிழர் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×