search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை படத்தில் காணலாம்.

    பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

    • உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர்.
    • பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர். இருந்த போதும், சேமக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சேமக்கோட்டையில் விரைவில் பயணியர் நிழற்குடை கட்டித் தரபடுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×