search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Talk"

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்
    • அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடை பெற்ற கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன்களை எந்தவித சிரமமின்றி பெறும் வகை யில், அவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து கல்வி கடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்கள் பெறுவதற் கான வழிமுறைகள் தெரியப டுத்தும் வகையிலும், எளி மையாக்கும் விதத்திலும் கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனைக் கூட்டங்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

    மேலும், கல்வி கடன்கள் பெறுவதில் சிரமங்கள் ஏதும் இருப்பின் அது குறித்து விளக்கங்கள் பெறு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது.

    வித்யலஷ்மி இணையத ளத்தின் மூலம் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். இதேபோன்று மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் தெரியப்ப டுத்தி அவர்களையும் விண்ணப்பிக்க செய்ய வேண்டும்.

    கல்வி கடன் பெறுவது தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள் ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்களகவோ அல்லது கல்லூரி முதல்வர்கள் அல்லது நிர்வாகிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜே.லயனல் பெனடிக்ட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இது குறித்து கும்பகோணம் ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பண்டாரவாடை மற்றும் அரையபுரம் வடிகால் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்கால் விரைவில் தூர்வாரும்பனிகள் மேற்கொள்ளப்படும், விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்கிட வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் தீர்வு மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    ×