search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerboat"

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
    • 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும், 3 நாட்கள் செல்ல வேண்டும் என்று கூறி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த வாரம் முழுவதும் கடலுக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் சென்றதால் கடந்த வாரம் முழுவதும் மீன்பிடி தொழி லாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் விசைப் படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    ×