search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishing Industry"

    • கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மிதிலி புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 13-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது மிதிலி புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 2-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன், தொண்டி, ஏர்வாடி, சோழியங்குடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரம் நாட்டு படகுகள், பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் மட்டும் 1,050-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வருமானமின்றி சிரமப்பட்டனர். இதனால் மீனவர்கள் மாற்று தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு தொழில்களுக்கு செல்லாத மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    நேற்று வரை பாம்பன், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் கடல் சற்று அமைதியாக காணப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியளித்தனர். 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததால் இறால், கணவாய், நண்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

    5 நாட்களாக மீன்பிடி தொழில் நடைபெறாததால் தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    • 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
    • 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும், 3 நாட்கள் செல்ல வேண்டும் என்று கூறி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த வாரம் முழுவதும் கடலுக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் சென்றதால் கடந்த வாரம் முழுவதும் மீன்பிடி தொழி லாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் விசைப் படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் இடையே வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    • ராமநாதபுரம் கண்மாய் மதகு நதியில் செங்கல் சூளை தொழிலாளர்கள், வேட்டி-சேலையை போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.
    • இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

    ராமநாதபுரம்

    தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியதால் அதன் உபரி நீருடன் மழை நீரும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் வழியாக கார்குடியில் உள்ள பெரியகண்மாய் தலைமதகு வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் வருகிறது. அதிகளவு நீர்வரத்தால் பெரிய கண்மாய் நிரம்பி காவனுார், புல்லங்குடி வாய்க்கால்களுக்கு தலைமதகு பகுதியில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

    ராமநாதபுரம் அருகே கார்குடியில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் வைகை ஆற்று நீரில் துள்ளி குதித்த மீன்களை அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள், பொதுமக்கள் வலை போட்டும், வேட்டி, சேலையை பயன்படுத்தியும் போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.

    • வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
    • கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் பாண்டி ச்சேரி உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுருக்குமடி வலை தொழில்' நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொழிலை அனுமதிக்க மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீனவ கிராமத்தினர் மனு அளித்தனர்.

    மீனவர்கள் அளித்த மனுவில், 2004ம் ஆண்டு முதல் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் இத்தொழில் நடந்தது.

    கடந்த 2020ம் ஆண்டு தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

    சுருக்குமடி வலை தொழில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைபெ றுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுருக்குமடிவலை தொழில் நடைபெறவில்லை.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளா தார ரீதியாகவும் மனஉ ளைச்சலுக்கு உட்பட்டு வாழ வழியில்லாமல் உள்ளோம். மற்ற மாவட்டங்களில் உள்ள சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் நமது மாவட்ட கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறைகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் மீன்பிடி தொழில் செய்வோம். சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×