search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி போனஸ் முன்னதாக கிடைக்குமா? விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    தீபாவளி போனஸ் முன்னதாக கிடைக்குமா? விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

    • தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். சொந்த ஊரை விட்டு இங்கு வந்து ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். போனஸ் பணத்தை வாங்கி, பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக வழங்கப்படாதது, பஞ்சு, நூல் விலை உயர்வால் உற்பத்தி முடங்கியது போன்ற காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வும் விசைத்தறி உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் செய்த விசைத்தறியாளர்கள், மின் கட்டணத்தை அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுவரை விசைத்தறிகள் முழுமையாக இயங்கவில்லை.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு போனஸ் கிடைக்குமா என்ற இக்கட்டான சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும், தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விசைத்தறி உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மார்க்கெட் நிலைமை சீரான உடன் விசைத்தறிகளை முழு வீச்சில் இயக்க விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. வரும் வாரத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போனஸ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

    Next Story
    ×