search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேர் ஆயில்"

    • இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது.
    • நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும்.

    முடி வெள்ளையாக மாறுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வரும் இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தான் இயற்கையும் கூட. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது. வயதானவர்களுக்கு நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும். அப்படி இருக்கையில் இளம் வயதினருக்கு இந்த நரைமுடி வந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

    இளநரை மறைவதற்கு நாம் மூசாம்பரம் என்னும் பொருளை மட்டும் நாட்டு மருந்து கடையில் வாங்க வேண்டும். இது கற்றாழை ஜெல்லில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை நாம் பயன்படுத்தாமல் தூர போட்டு விடுவோம். அந்த திரவத்தை சேகரித்து வைத்து அதில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த முசாரம். இதை வைத்து தான் இளநரையை தடுப்பதற்கான பேக்கை தயார் செய்யப் போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்

    மூசாம்பரம்

    செய்முறை:

    இந்த பேக் தயாரிக்க முதலில் கால் கப் நல்ல முற்றிய தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் இருந்து கிடைக்கும் திக்கான தேங்காய்ப் பாலை அரை டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் போதும். இப்போது 1 பவுலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி அதில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு விடுங்கள்.

    இது குறைந்தது 4 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். இந்த நேரத்திற்குள்ளாக இதில் உள்ள முசாரம் தேங்காய் பாலில் நன்றாக ஊறி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். இதை நீங்கள் தலையில் பேக்காக அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள்.

    இது 1 மணி நேரம் வரை தலையில் இருக்கட்டும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூவை போட்டு தலைக்கு குளித்தால் போதும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தும் போது உங்களின் இளநரை பிரச்சனை ஒரு மாதத்திற்குள்ளாகவே சரியாகி விடும்.

    மேலும் அது மட்டும் இன்றி இதைத்தொடர்ந்து பயன்படுத்தும் போது வெள்ளை முடி வருவது தடுப்பதோடு, வெள்ளை முடியும் கூட நிறம் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை.
    • தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை ஊற வைத்து தேய்க்கலாம்.

    எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.

    வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்

    வயிற்றில் அதிகளவு பித்தம் இருத்தல்.

    மனதில் அதிகளவு கவலைகள் இருத்தல்.

    அதிகளவு ரசாயனங்கள் முடிக்கு பயன்படுத்துதல்.

    தலைமுடியில் மாசுக்கள் அதிகளவு படித்தல்.

    ஹார்மோன் குறைபாடுகள்.

    இயற்கையாக முடி கருமையாக சில வழிமுறைகள்:

    நெல்லிக்காய்:

    நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம். எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும்.

     வெங்காயம்

    வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும். வெங்காய சாற்றினை தலையில் ஊறவைத்து பின்னர் ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.

    கறிவேப்பிலை

    இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை. கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு வைக்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலை அல்லது விதையை ஊறவைத்து தினமும் தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணையில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் நன்கு ஊற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு அலச வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை செய்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.

    வெந்தயம்

    வெந்தயத்தை அரைத்து தினமும் தலையில் நன்கு ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும். தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை ஊற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வாருங்கள் முடி கருமையாக மாறும்.

    செம்பருத்தி

    செம்பருத்தி பூ மற்றும் இலையை எடுத்து அரைத்து தலையில் நன்கு ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் தலை முடியை கருமையாக மாற்றலாம். இந்த செம்பருத்தி தலைக்கு தேவையான போஷாக்கினை கொடுப்பதுடன் முடி உதிர்வில் இருந்தும் தடுக்கின்றது.

    தலைமுடியை கருமையாக மாற்ற இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் நமது ஆரோக்கியத்தையும் பேண உதவுகிறது.

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது.
    • இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக்.

    முதுமைக்கு நரை அழகுதான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது. தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்றைக்கு நாம் இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். இது உங்கள் முடிக்கு உறுதி தந்து, முடி உதிர்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

     தேவையான பொருட்கள்:

    ஆளி விதை – 100 கிராம்

    கற்றாழை – 3 டீஸ்பூன்

    விட்டமின் இ கேப்ஸ்யூல் – 3

    செய்முறை:

    ஆளி விதை ஹேர் பேக் செய்வதற்கு 100 கிராம் ஆளி விதையை எடுத்து அத்துடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நாம் கொதிக்க வைத்துள்ள ஆளி விதை தண்ணீர் ஒரு ஜெல் பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி எடுத்துள்ள ஆளிவ் ஜெல்லுடன் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பிறகு இதோடு இ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது ஆளிவ் ஹேர் பேக் ரெடி. முடியில் தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விட வேண்டும்.

    இந்த ஆளிவ் ஹேர் பேக்கில் ஒமேகா 3 என்ற ஒரு வகையான சத்து இருப்பதால், இது நம் முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது. இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.

    • பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்
    • தலைக்கு குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    நாட்டு மருந்து கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள். டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

     பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

    30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களை தடவிய 20 நிமிடங்களில் தலையில் இறங்கும், மேலும் நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை. பிறகு தலைமுடியை நன்கு வாரிவிடவும். இந்த கலவையை சூடுபடுத்தக் கூடாது.

     பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது) கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய தலையில் இந்த கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவ வேண்டும். பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்த கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை. தலைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.

    45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.

    • தலைமுடி வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
    • முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.

    தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எளிதாக தயார் செய்யலாம்.

    தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்சிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது

    தேவையான பொருட்கள்:

    கடுகு எண்ணெய்

    கறிவேப்பிலை

    ரோஸ்மேரி இலை

    வெந்தயம்

    பாதாம் எண்ணெய்

    விளக்கெண்ணெய்

    செய்முறை:

    முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.

    வெந்தயம் தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

    ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

    இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்சினைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    ×