search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hibiscus Flower"

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது.
    • இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன.

    இன்று பலருக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது. அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து பல ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை உபயோகிக்கிறோம்.

    ஆனால், இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன. அவற்றில் ஒன்று செம்பருத்தி பூ. செம்பருத்தியைக்கொண்டு எவ்வாறு சருமத்தை பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்...

    தேவையானபொருட்கள்

    மைசூர் பருப்பு- 25 கிராம்

    பாதாம்- 25 கிராம்

    செம்பருத்தி பூ- 10

    தயிர்- ஒரு ஸ்பூன்

    விட்டமின் ஈ கேப்ஸ்யூல்- 1

    தேன் ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    மைசூர் தால் பருப்பு மற்றும் பாதாம் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை தனியாக ஒரு டப்பாவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ மற்றும் தயிர், ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள பாதாம், மைசூர் பருப்பு பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஃபேஸ் பேக் அளவுக்கு கலந்துகொள்ள வேண்டும்.

     இந்த செம்பருத்து ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை தடவி அரைமணிநேரம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று பொலிவாக இருக்கும். இதையே தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதும் நல்ல மாற்றத்தை நீங்களே உணரலாம்.

    பொதுவாக மலர்களின் நிறம் என்பது நறுமணத்தை மட்டும் கொண்டிருக்காது. வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களையும் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ் பேக் உங்கள் கன்னங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வைக்கும் என்பதை உணர்வீர்கள்.

    ×