search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gray Hair Problem"

    • இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது.
    • நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும்.

    முடி வெள்ளையாக மாறுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வரும் இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தான் இயற்கையும் கூட. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது. வயதானவர்களுக்கு நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும். அப்படி இருக்கையில் இளம் வயதினருக்கு இந்த நரைமுடி வந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

    இளநரை மறைவதற்கு நாம் மூசாம்பரம் என்னும் பொருளை மட்டும் நாட்டு மருந்து கடையில் வாங்க வேண்டும். இது கற்றாழை ஜெல்லில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை நாம் பயன்படுத்தாமல் தூர போட்டு விடுவோம். அந்த திரவத்தை சேகரித்து வைத்து அதில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த முசாரம். இதை வைத்து தான் இளநரையை தடுப்பதற்கான பேக்கை தயார் செய்யப் போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்

    மூசாம்பரம்

    செய்முறை:

    இந்த பேக் தயாரிக்க முதலில் கால் கப் நல்ல முற்றிய தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் இருந்து கிடைக்கும் திக்கான தேங்காய்ப் பாலை அரை டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் போதும். இப்போது 1 பவுலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி அதில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு விடுங்கள்.

    இது குறைந்தது 4 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். இந்த நேரத்திற்குள்ளாக இதில் உள்ள முசாரம் தேங்காய் பாலில் நன்றாக ஊறி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். இதை நீங்கள் தலையில் பேக்காக அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள்.

    இது 1 மணி நேரம் வரை தலையில் இருக்கட்டும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூவை போட்டு தலைக்கு குளித்தால் போதும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தும் போது உங்களின் இளநரை பிரச்சனை ஒரு மாதத்திற்குள்ளாகவே சரியாகி விடும்.

    மேலும் அது மட்டும் இன்றி இதைத்தொடர்ந்து பயன்படுத்தும் போது வெள்ளை முடி வருவது தடுப்பதோடு, வெள்ளை முடியும் கூட நிறம் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • தலைமுடி வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
    • முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.

    தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எளிதாக தயார் செய்யலாம்.

    தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்சிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது

    தேவையான பொருட்கள்:

    கடுகு எண்ணெய்

    கறிவேப்பிலை

    ரோஸ்மேரி இலை

    வெந்தயம்

    பாதாம் எண்ணெய்

    விளக்கெண்ணெய்

    செய்முறை:

    முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.

    வெந்தயம் தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

    ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

    இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்சினைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    ×