search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair Thickening"

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம்.
    • ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம்.

    வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம். இண்டிகோ பவுடரை, அவுரி இலை பொடின்னு சொல்லுவாங்க. ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம். இந்த அவுரி இலை பொடியை வழக்கமாக ஹென்னா பொடியோடு சேர்த்து, கலந்து ஹேர்பேக் போடுவார்கள். அது கொஞ்சம் சிரமமான விஷயம். அதற்கு கொஞ்சம் நேரமும் எடுக்கும். ஆனால் சட்டுனு ஆயில் பாத் எடுக்கும் நேரத்தில் உங்களுடைய நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஹெர்பல் டை ஆயிலை வீட்டில் செய்து பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய்- 5

    சின்ன வெங்காயம்- 5

    அவுரி இலை- ஒரு கப்

    மருதாணி இலை- அரை கப்

    கரிசலாங்கன்னி- அரை கப்

    வேப்பிலை- கால் கப்

    செம்பருத்தி இலை- கால் கப்

    கறிவேப்பிலை- கால் கப்

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்

    ஆவாரம்பூ- ஒரு ஸ்பூன்

    ரோஜா இதழ்- ஒரு ஸ்பூன்

    வெட்டிவேர்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்

    செய்முறை:

    முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அந்த ஜூனை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் பாதி அளவில் ஊற்ற வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த சாறினை சேர்க்க வேண்டும். சலசலப்பு அடங்கியதும் அதில் அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை ஆகியவற்றை அரைத்து கொதிக்கும் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

    அதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் போன்றவற்றையும் மிக்சியில் போட்டு பொடியாகி இதில் சேர்க்க வேண்டும். அதன்புறகு மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சி எடுத்தால் அவ்வளவு தான் ஹெர்பல் டை ஆயில் தயார்.

    ×