search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக்"

    • நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்.
    • ஆரோக்கியமானதாக இருக்கும்.

    பேக்கரிகளிலும், டீக்கடைகளிலும் விற்கும் நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த நெய் பிஸ்கட்டை நம் வீட்டிலேயே கூட செய்யலாம். ஓவன் தேவையே இல்லை. சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, பிஸ்கட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். எந்த ஒரு பிரிசர்வேட்டிங்கும் சேர்க்காமல், ஆரோக்கியமான இந்த பிஸ்கட்டை உங்கள் கையாலேயே செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். நெய் பிஸ்கட் வீட்டிலேயே எப்படி செய்வது? பார்த்து விடலாமா!

    தேவையான பொருட்கள்

    நெய்-200 கிராம்

    மைதா-400 கிராம்

    சர்க்கரை-200 கிராம்

    பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை

    பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்

    ரீபைண்ட் ஆயில்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனை கீரிமியான அளவுக்கு நன்றாக் பீட் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் கிரீம் அளவுக்கு பீட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் மைதா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, வாசனை இல்லாத ரீபைண்ட் ஆயில், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து அதனை ஒரு அரைமணிநேரத்திற்கு மூடி போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.

    அரைமணிநேரத்திற்கு பிறகு அந்த மாவினை எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை உருண்டைகளாக உருட்டி தட்டி பிஸ்கெட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்து அதனை ஒரு பிளேட்டி வைக்க வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆனதும் அதில் பிஸ்கெட்டுகளை வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கெட் தயார்.

    பிஸ்கட்டை அடுப்பில் இருந்து எடுத்ததும், சூடாக இருக்கும் போது, சாஃப்ட்டாக தான் இருக்கும். பிஸ்கட் நன்றாக ஆறிய பின்பு சுவைத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கிய சுவையை விட, உங்கள் கைகளால் நீங்களே செய்த இந்த பிஸ்கட்டின் ருசி அதிகமாகத்தான் இருக்கும்.

    • மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
    • தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான டிஷ் சூரியகலா

    `சந்திரகலா', `சூர்யகலா' என்ற இரண்டு பெயர்களை கேட்டதும் ஏதோ ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் என்று தான் நாம் நினைப்போம். ஆனால், உண்மையிலேயே அவை ஒரு ஸ்வீட் பெயர் என்று சொன்னால் ஆச்சர்யம்தான். இந்த பதிவில் மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தஞ்சாவூரில், `பாம்பே ஸ்வீட்ஸ்' என்றாலே `சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்' என்கிற அளவுக்கு பிரபலமான டிஷ். தஞ்சாவூரின் அடையாளங்களை சொல்லும் பட்டியலில் புதுவரவு இந்த சூரியகலா ஸ்வீட் என்றால் அது மிகையாகாது.

    தேவையான பொருட்கள்:

    மைதாமாவு -ஒரு கப்

    சர்க்கரை- ஒரு கப்

    நெய்- 3 ஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    கோவா- ஒருகப்

    முந்திரி, பாதாம்- உடைத்தது

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கோவாவை பூரணமாக வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் வகையின் பெயர் தான் சூரியகலா. முதலில் பூரணம் தயார் செய்துகொள்ளலாம். அதற்கு ஒரு கப் இனிப்பாக இருக்கும் கோவாவை ஒரு பவுளில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகிய நட்ஸ் வகைகளை உடைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் சூரியகலா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை 10 நிமிடம் முடிவைக்க வேண்டும்.

    தயாரித்து வைத்த மைதாமாவு கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக அதாவது பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி அதனை சிறிய வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சிறிய உருண்டைகளையும் வட்டமாக தட்டி அதன் ஒருபகுதியில் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்த கோவா கலவைகளை நடுவே வைத்து அதன் மேல் மற்றொரு தட்டையை வைக்க வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்ட வேண்டும். மற்றும் இதன் ஓரங்களை கைமுருக்கு உருட்டுவது போல நன்றாக மடித்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளையும் சூரியகலாக்களாக வட்டமான வடிவில் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து இந்த சூரியகலாக்களை பொறித்து எடுக்க வேண்டும்.

    ஜீரா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நாம் கையில் தொட்டு பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும் அளவுக்கு ஜீரா தயார் வேண்டும். கம்பி பதம் தேவையில்லை.

    நாம் ஏற்கனவே எண்ணெயில் பொறித்து தயாராக வைத்துள்ள சூரியகலாக்களை அந்த ஜீராவில் சேர்க்க வேண்டும். நன்கு அந்த ஜீராவில் சூரியகலாக்களை புரட்டி எடுத்து 5 நிமிடத்திற்கு ஜீராவில் இருக்குமாறு அதனை வைக்க வேண்டும். ஜீரா முழுவதும் சூரியகலாவில் கலந்ததும் இதனை தனியாக எடுத்து வைக்கலாம். சுவையான சூரியகலா தயார்.

    • சப்போட்டாவை வைத்து வித்தியாசமான முறையில் கேசரி.
    • கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சப்போட்டா பழம்- 8

    சர்க்கரை- 1/2கப்

    ரவை- 1/2கப்

    பால்- 1/4கப்

    நெய்- 1/4கப்

    பாதம், முந்திரி, பிஸ்தா- 1/2கப்

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தூள் உரித்து வைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும்.

    அதன்பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.

    • கேரட் கப் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • ஈவ்னிங் ஸ்நாக்காக டீயுடன் சேர்ந்து பரிமாற மிகவும் ஏற்றது.

    கடைகளில் கிடைக்கும் கேக் வகைகளை பதப்பத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். அதையும் நாம் குழந்தைகள் விருப்பத்திற்காக வாங்கி கொடுக்கிறோம். இவ்வாறு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்கப்படும் பொருட்களை வாங்குவதை விடுத்து வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எளிதாக செய்யக்கூடிய கேரட் கப் கேக் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 1/4 கிலோ

    பால்- 250

    மைதா- 250 கிராம்

    நாட்டு சர்க்கரை- 500 கிராம்

    பட்டை தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    பட்டர்- 100 கிராம்

    கெட்டி தயிர்

    வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    டிரை கிரேப்ஸ்- அலங்கரிக்க

    செய்முறை:

    ஒரு பவுளில் பட்டர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கரைந்து வந்ததும் அதில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எசன்ஸ், கெட்டி தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் அதில்  சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கவும்.

    பின்னர் இந்த கலவையில் துருவிய கேரட், டிரை கிரேப்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கேக் கலவையை ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு அதனை ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆன பிறகு கேக் கலவையை பேப்பர் கப் வடிவங்களில் ஊற்றி அதனை ஒரு பிளேட்டில் வைத்து 25 நிமிடத்திற்கு ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி வைத்து சமைக்க வேண்டும்.

    நன்றாக வந்துள்ளதா என்பதை ஒரு பல்குத்தும் குச்சி வைத்து கேக் கலவையில் குத்திப்பார்த்து சோதித்து பார்க்கவும். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அவ்வாறு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். கேரட் கப் கேக் மீது துருவிய பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான கேரட் கப் கேக் தயார்.

    • வித்தியாசமான சுவையை கொடுக்கும்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும்.

    பாயாசம் என்றாலே நமக்கு பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை வித்தியாசமான பாயாசங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இது உண்மையில் வித்தியாசமான சுவையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் - 4 துண்டுகள்

    சர்க்கரை- 2 கப்

    சேமியா- அரை கப்

    பால்- ஒரு லிட்டர்'

    நெய்- தேவையான அளவு

    முந்திரி, பாதாம்- அலங்கரிக்க

    கான்பிளவர்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை பிய்த்து போட்டு பிரட் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு பால் ஊற்றி பிரட் துண்டுகள் நன்றாக ஊறியதும் அதனை நன்றாக கலந்து அதில் கான்பிளவர் மாவை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.

    அந்த உருண்டைகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உருட்டி வைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் சிறிதளவும் நெய் சேர்த்து அதில் சேமியாவை நிறம் மாறும் வரை வறுத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்ததும் அதில் சர்க்கரை ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் வறுத்த பிரட் உருண்டைகளை சேர்க்க வேண்டும். பால் கொதித்து உருண்டைகள் பாலில் நன்றாக ஊறி வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அருமையான பிரட் உருண்டை பால் பாயாசம் தயார். இதனை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

    • முட்டை சேர்க்காமல் செய்யும் ரவா கேக்
    • குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரவையை வைத்து குழந்தைகளுக்கு பல ஈவ்னிங் ஸ்நாக்குகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ஓவன் இல்லாமல் ரவையை வைத்து முட்டை சேர்க்காமல், எப்படி சுலபமான முறையில் கேக் செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை- 2 கப்

    சர்க்கரை- ஒரு கப்

    தயிர்- 3 கரண்டி

    பால்- ஒரு லிட்டர்

    எண்ணெய்- 3 ஸ்பூன்

    டூட்டி புரூட்டி- 3 ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ரவையை மிக்சி ஜாரில் பொடித்து எடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். அதில் பொடித்த ரவை மற்றும் பால் சிறுகச்சிறுக கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அந்த கலவையை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும்.

    இதன்பிறகு இந்த கலவையில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கி அந்த கலவை கட்டியாக இருந்தால் அதில் பால் சேர்த்து கலந்து அதில் டூட்டி புரூட்டியை சேர்த்து இதனை ஒரு கேக் செய்யும் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி அதனுள் பட்டர் பேப்பர் வைத்து அதில் இந்த கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் கேக் கலவையை அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவிற்கு பாத்திரத்தை நன்றாக முட வேண்டும் 15 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து பார்க்கவும். அதில் ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் குச்சியில் அந்த கலவை ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வந்துள்ளது என்று அர்த்தம். சுவையான ரவா கேக் தயார்.

    அந்த கேக்கை ஒரு வட்ட வடிமான பிளேட்டில் போட்டு அதனை கேக் வடிவத்தில் கட் செய்து எடுத்து சூடு ஆறியதும் பரிமாறவும். இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். முட்டை சேர்க்காமல் மிகவும் மிருதுவான ரவா கேக் செய்ய வேண்டுமா முயற்சி செய்து பாருங்கள்.

    • பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கு ஏற்றது.
    • அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.

    டீ டைம் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கு வருவது ஒரு கிளாஸ் டீயும், இரண்டு பிஸ்கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டீ பிஸ்கட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். கடைகளில் வாங்கும் பிஸ்கட்டில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எதையும் சேர்க்காமல் நாம் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அருமையான பிஸ்கட்டை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்

    சோளமாவு (கான்பிளவர்)- ஒரு கப்

    வெண்ணெய்- 25 கிராம்

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள கான்பிளவர் மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பவுளில் கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும். வெண்ணெய் சேர்த்தவுடன் மாவுக்கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக திரட்டி ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வரிசையாக அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அடி கனமான இரும்புக் கடாயின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் தயாராக பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். கிரிஸ்பியான பட்டர் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பிஸ்கட்டுகளை எடுத்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.

    குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் மிகவும் உகந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.

    • சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
    • ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    ராகி மாவு- அரை கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    தேங்காங் துருவல்- ஒரு கப்

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    வேர்கடலை பொடித்தது- கால் கப்

    பொடித்த வெல்லம்- அரை கப்

    வாழை இலை-1

    செய்முறை:-

    முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.

    இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.

    ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.

    ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    • குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு -கால் கப்

    கோதுமை மாவு - கால் கப்

    நாட்டு சர்க்கரை - அரை கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - ஒரு சிட்டிகை

    கோகோ பவுடர்- 2 ஸ்பூன்

    பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்

    நெய்- 100 கிராம்

    முந்திரி - 10 நம்பர்

    காய்ச்சாத பால் - 100 மி.லி

    செய்முறை:-

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

    அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.

    பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.

    அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.

    • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    தேவையான பொருட்கள்:-

    கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

    வெல்லம் -300 கிராம்

    வேர்கடலை - 200 கிராம்

    ஏலக்காய்- 4 நம்பர்

    நெய் - தேவையான அளவு

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:-

    ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

    90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:-

    பாசி பயறு - 200 கிராம்

    நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

    வேர்கடலை - 100 கிராம்

    ஏலக்காய் - 4 நம்பர்

    உப்பு -ஒரு சிட்டிகை

    நெய் - 3 கரண்டி

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

    ×