search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi"

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
    • ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    ராகி மாவு- அரை கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    தேங்காங் துருவல்- ஒரு கப்

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    வேர்கடலை பொடித்தது- கால் கப்

    பொடித்த வெல்லம்- அரை கப்

    வாழை இலை-1

    செய்முறை:-

    முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.

    இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.

    ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.

    ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது.
    இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் அதிகமாக கேழ்வரகு பயிர் செய்யப்பட்டு வருகிறது.

    வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. சாகுபடிக்கு வண்டல் மண் மிகவும் ஏற்றது. உரமும் பூச்சிக் கொல்லியும் தேவையில்லை. கேழ்வரகு ஆண்டுகொரு முறை விளையும் சிறுதானியப் பயிர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பைக் கூழ்கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. இன்று வரை வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவு கேழ்வரகு தான்.

    கொழுப்பைக் குறைக்கும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமா நீங்கும், ரத்தம் தூய்மை அடையும், உடலில் வெப்பத்தை சமன் செய்யும், குளிர்ச்சி அளிக்கும், உயர் ரத்த அழுத்தம் சீராகும், உடல் ஓய்வும், வலிமையும் பெறும். ஒற்றைத் தலைவலி தீரும், கல்லீரல்- இதய நோய் விலகும், குடலுக்கு வலிமை அளிக்கும், குடல் புண் குணமடையும், சரும ஆரோக்கியத்துக்கு உதவும், தூக்கமின்மையைப் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பசி தணிக்கும், பல், எலும்புத் தேய்மானம் சரியாகும், மலச் சிக்கலை விலக்கும், ரத்த சோகையை ஒழிக்கும்

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது. குறைந்த கொழுப்பு, நிறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. பாலைவிட மூன்று மடங்கும், அரிசியை விட 10 மடங்கும் கால்சியம் உள்ளது. கேழ்வரகில் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    ×