search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "millets"

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
    • 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 26 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு தூத்துக்குடிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.
    • சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    வேகமாக ஓடும் உலகில் காலை உணவை தவிர்ப்பதை காரணம் காட்டி பல ரெடி டு ஈட் உணவுகள் நுழைந்து விட்டன. கார்ன் ஃப்ளேக்ஸ், கப் நூடுல்ஸ், பாதி சமைத்த உணவுகளாக மாறிவிட்டது. அதிலும் சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    அப்படி தொடங்கியது தான் ஓட்ஸ் மோகம். போலந்து, ஆஸ்திரேலியா, மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் விளைவது தான் ஓட்ஸ். அதை இங்கே இறக்குமதி செய்ய அதன் நன்மைகளை அடுக்கி விட்டனர்.

    இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம்.

    ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், பசிக்கு நாம் அதிகம் சாப்பிட வாய்ப்பும் உள்ளதாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!

    அதற்கு சுவை இல்லாததால் சக்கரை ,ஸ்ட்ராபெரி, வாழை என ஃப்ளேவர்களை சேர்த்து விட்டனர். சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம்.

    அதைவிட கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. இவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. விலையும் குறைவு!

    100 கிராம் கம்பில், 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது, உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் எளிதில் குறைக்கும். ராகி உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

    எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யப்படும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறேதிலுமில்லை.

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது.
    இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் அதிகமாக கேழ்வரகு பயிர் செய்யப்பட்டு வருகிறது.

    வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. சாகுபடிக்கு வண்டல் மண் மிகவும் ஏற்றது. உரமும் பூச்சிக் கொல்லியும் தேவையில்லை. கேழ்வரகு ஆண்டுகொரு முறை விளையும் சிறுதானியப் பயிர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பைக் கூழ்கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. இன்று வரை வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவு கேழ்வரகு தான்.

    கொழுப்பைக் குறைக்கும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமா நீங்கும், ரத்தம் தூய்மை அடையும், உடலில் வெப்பத்தை சமன் செய்யும், குளிர்ச்சி அளிக்கும், உயர் ரத்த அழுத்தம் சீராகும், உடல் ஓய்வும், வலிமையும் பெறும். ஒற்றைத் தலைவலி தீரும், கல்லீரல்- இதய நோய் விலகும், குடலுக்கு வலிமை அளிக்கும், குடல் புண் குணமடையும், சரும ஆரோக்கியத்துக்கு உதவும், தூக்கமின்மையைப் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பசி தணிக்கும், பல், எலும்புத் தேய்மானம் சரியாகும், மலச் சிக்கலை விலக்கும், ரத்த சோகையை ஒழிக்கும்

    ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது. குறைந்த கொழுப்பு, நிறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. பாலைவிட மூன்று மடங்கும், அரிசியை விட 10 மடங்கும் கால்சியம் உள்ளது. கேழ்வரகில் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    ×