search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசரி"

    • அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
    • வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    * கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.

    * பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)

    * கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.

    * ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.

    * அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.

    * கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.

    • சப்போட்டாவை வைத்து வித்தியாசமான முறையில் கேசரி.
    • கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சப்போட்டா பழம்- 8

    சர்க்கரை- 1/2கப்

    ரவை- 1/2கப்

    பால்- 1/4கப்

    நெய்- 1/4கப்

    பாதம், முந்திரி, பிஸ்தா- 1/2கப்

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தூள் உரித்து வைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும். அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும்.

    அதன்பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.

    • ரவை, சேமியாவில் கேசரி செய்து இருப்பீங்க.
    • இன்று ஜவ்வரியில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    குங்குமப்பூ - 1 கிராம்

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

    குங்குமப்பூவை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

    * ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் வடிகட்டிய ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறவும்.

    * ஜவ்வரிசியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல் வரும் வரை இவ்வாறு செய்யவும்.

    * அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது நெய், ஊறவைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்து திக்கான பதம் வரும் போது வறுத்து வைத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கும் போது சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி கேசரி தயார்.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா வைத்து கேசரி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    தண்ணீர் - 400 மி.லி.

    நெய் - தேவையான அளவு

    முந்திரி பருப்பு - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    கேசரி பவுடர் - சிறிதளவு

    செய்முறை :

    சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து வைக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.

    கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும்.

    சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

    சுவையான சேமியா கேசரி தயார்.

    இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    • பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
    • இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    பழத்துண்டுகள் - 1 1/2 கப்

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - விருப்பத்திற்கேற்ப

    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.

    அடிகனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை கொட்டிக் கிளறவும்.

    ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அதில் ஏலக்காய்த் தூள், கேசரி பவுடரை சேர்த்து கிளறவும்.

    பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

    கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பழக்கேசரி ரெடி.

    இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.

    ×