search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi Biscuits"

    • சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.
    • சிறு தானிய உணவுகளை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது.

    சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளதால் சிறு தானிய உணவகங்களை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது. இந்த சூழலை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து சிறுதானிய உணவு கூடங்களை அமைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். கேழ்வரகு கேக் செய்வது போல கேழ்வரகு பிஸ்கட் செய்வதும் மிக மிக எளிமையான ஒன்றாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- ஒரு கிலோ,

    சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- அரை கிலோ,

    டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய்- அரை கிலோ

    கான்பிளவர் மாவு- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

    அந்த மாவினை தேவையான வடிவத்தில் அதாவது பிஸ்வடிவத்திற்கு வெட்டி அதன் நடுவே ஃபோர்க் கரண்டியால் கோடுகளாக இட்டு ஒரு பிளேட்டில் வெண்ணெய் தடவி அதில் அந்த பிஸ்கட்களை அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 150 டிகிரி செல்சியசில் சுமார் 30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து குளிர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

    இந்த கேழ்வரகு பிஸ்கட் செய்யும் போது கேழ்வரகு மாவுடன் சுமார் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளி மாவு சேர்த்தும் பிஸ்கட் செய்ய முடியும். வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்தும், தூளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். மாவு பிசையும் போது உலர்ந்த முந்திரி அல்லது வேர்கடலை பருப்பினை வருத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அலங்காரத்திற்காகவும் சுவை மற்றும் சத்துக்களை கூட்டுவதற்காகவும், பிஸ்கட் மேலே தூவுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு -கால் கப்

    கோதுமை மாவு - கால் கப்

    நாட்டு சர்க்கரை - அரை கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - ஒரு சிட்டிகை

    கோகோ பவுடர்- 2 ஸ்பூன்

    பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்

    நெய்- 100 கிராம்

    முந்திரி - 10 நம்பர்

    காய்ச்சாத பால் - 100 மி.லி

    செய்முறை:-

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

    அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.

    பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.

    அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.

    ×