search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகத்தடை"

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால் அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தேவையில்லாத இடங்களில் வேகத்தடை; அரசு பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் நல சங்கம் சார்பில் காலாண்டு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை நகராட்சி துறை, மின்சாரத் துறை, வட்டார போக்குவரத்து துறை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை பதிவாளர், முதன்மை கல்வி துறை மற்றும் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த 22 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இபுராகீம் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை 21 வார்டு பகுதியில் மொத்தம் 105 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன் முதியோர், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    விபத்தும் ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. ஆகவே கீழக்கரை நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்து தேவையில்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.

    கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர். ரோடு சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கண்ணாடி அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து தோணி பாலம் வரை, பூங்காவில் இருந்து அமிர்தா பள்ளிக்கூடம் வரை சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கீழக்கரை புதிய பஸ் நிலையத்திற்கு திருநெல்வேலி, சாயல்குடி, நாகூர், பட்டுக்கோட்டை பஸ்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைகின்றனர். இதை கண்காணிக்க போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரை நியமிக்கவும், தாலுகா அலுவலகத்தில் புறநகர் பஸ்களை நிறுத்தி செல்லவும், அங்கு வேகத்தடை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    நுகர்வோர் நலச்சங்க கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நல சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
    • வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    வீரபாண்டி:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பேரையூர் விளக்கு சாலையில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலை செல்கிறது.

    இந்த சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இதனால் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடந்து கோவில் செல்லவும், ஊருக்கு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பேரையூர் விளக்கு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், சிலர் இறந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    • ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.பெருகி வரும் வாகனங்களால் சாலைகள் அகலப்படுத்தப்படுவது அவசியமான‌ஒன்று ஆகும்.

    இதில் கல்லணை திருவையாறு சாலை (மாநில சாலை எண்22) கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை
    அகலப்படுத்தும் பணிகளில் திருச்செனம் பூண்டி வரை முடிந்துள்ளது.

    முடிவடைந்த சாலைகளில் வெள்ளைக் கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள் பிரதிபலிப்பானகள் பொருத்தி உள்ளனர்.

    சாலை அருகில் பள்ளிகள் வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகள் வைத்து உள்ளனர்.

    இவை எல்லாம் வரவேற்புக்குரியவை.

    அதேசமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலை துறை வண்ணத்தில் வைத்து உள்ளனர்.

    அருமையான‌ ஆங்கில‌வாசகங்கள் மட்டுமே இந்த வகையான போர்டுகளில் உள்ளன.

    தமிழ் நாட்டில் மாநில‌நெடுஞ்சாலையில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழி களிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம்.

    தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

    • காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்
    • கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருப்பூர் செல்லும் முக்கிய சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்.

    இதில் கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இது கடந்த 3 மாதத்தில் நடக்கும் 4-வது விபத்தாகும். இந்த சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் முத்தணம்பாளையம் பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருப்பூரு தெற்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 59 முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

    எனவே பள்ளிக்கு அருகே வேகத்தடை அமைத்து விபத்து ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • அடுத்தடுத்து 2 பேர் பலி
    • 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    கோவை:

    கோவை திருச்சி சாலையில், ராமநாதபுரம் - சுங்கம் இடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு வாலிபர், மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து சுங்கம் அருகே ேமம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போக்குவரத்து போலீசாரிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    முதற்கட்டமாக பாலத்தின் இரண்டு பக்கமும் தலா 2 இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து வளைந்து செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் பாலத்தின் பல்வேறு இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-ராமநாதபுரம் - சுங்கம் பாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்லலாம். ஆனால் சில வாகன டிரைவர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர்.

    எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    நேற்று ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேக தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. இன்று சுங்கத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழித்தடத்தில் வேக தடுப்பான் அமைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 3 முதல் 6 எண்ணிக்கையில் உயரம் குறைவாக இருக்கும் வகையில் இந்த வேக தடுப்பான்கள் அமைக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • விபத்தை தடுக்க வெள்ளியணை பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்

    கரூர் :

    கரூர் அடுத்த வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதனருகே அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி எதிரே வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் பிரிவு சாலையில் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து மாணவ மாணவியரின் பெற்றோர் கூறுகையில், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருபவர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும் வாகன சோதனையின் போது லாரி போன்ற கனரக வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் பள்ளிக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த இடத்தில் மூன்று பிரிவுகளில் இருப்பதால் கனரக வாகனங்கள் நிறுத்தும் போது எதிரில் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. துவக்கப் பள்ளி மாணவ மாணவியர் சமையல் கூடம் பள்ளி எதிரில் உள்ளது. அங்கு செல்ல பிரிவு சாலையை கடந்து செல்ல வேண்டும்.

    அப்போது மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி துவங்கும் நேரம், உணவு இடைவேளை, முடியும் நேரங்களில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி ஆசிரியர்கள் சாலை நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்வதோடு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×