என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ்"
- வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
- நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர்.
மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார்.
இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் கவுஷல் பூர்டல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி சேர்ந்தனர்.
இதில், கவுஷல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிம் ஷார்க்கி ஆசிப்புடன் ஜோடி சேர்ந்தார். பிம் ஷார்க்கி இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஆசிப்- ரோகித் பவுதல் விளையாடினர். இதில், ஆசிப் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து விளையாடிய வீரர்களில், ரோகித் 30 ரன்களும், கவுஷல் மல்லா 2 ரன்களும், தீப்பேந்திர சிங் 23 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும், சந்தீப் ஒரு ரன்னும் எடுத்தனர்.
ஆரிப் ஷேக் அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், கரண் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசியாக களத்தில் இருந்த லலித் ராஜ்பான்ஷி பூஜ்ஜியம் ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
- நேபாளம் அணி 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார். இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
நேபாளம் அணி முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹூப்பர் விளையாடி உள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.
இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்.
மேலும் ஒரு பேட்டராகவும் அவர் பங்களிப்பு அந்த தொடரில் மோசமாகவே இருந்தது. அதற்குப் பிறகு வரும் மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அந்த அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி அணிக்கு ஷாய் ஹோப், டி20 அணிக்கு ரோவ்மேன் பவலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
- அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார்.
டிரினிடாட்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நிகோலஸ் பூரன் கேப்டனாக நீடிக்கிறார். துணை கேப்டனாக ரோவ்மேன் பாவல் நியமிக்கப்பட்டு உள்ளார். பேட்ஸ்மேன் எவின் லீவிஸ் அணிக்கு திரும்பி உள்ளார். அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் யானிக் கரியா, ஆல் ரவுண்டர் ரேமன் ரீபர் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார். ரேமன் ரீபர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். யானிக் கரியா கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இருவரும் சர்வசே 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் ஆந்த்ரே ரசல், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-
நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பாவல், எவின் லிவீஸ், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஒடியன் சுமித், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரீபர், மெக்காய், அல்சாரி ஜோசப், அகேல் ஹொசைன், காட்ரெல், யானிக் கரியா.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்